வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இரா. சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா. சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஏப்ரல், 2013

அரசாங்கம் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தாது தனது தவறை உணர்ந்து தீர்வை வழங்க வேண்டும் : சம்பந்தன் எம்.பி.



லங்கையின் தேசிய பிரச்சினை சர்வதேச ரீதியில் சென்றமைக்கு உள்நாட்டில் பிரச்சினை தீர்க்கப்படாமையே காரணமாகும். அத்துடன் அரசு- கூட்டமைப்பு பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

'கூட்டமைப்பை பதிவு செய்வது சாத்தியமில்லை'

முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன், 10 ஏப்ரல், 2013

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பந்தன்



மு ஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனவாத சக்திகள் நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

புதன், 27 மார்ச், 2013

வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் அரசு : சம்பந்தன் எம்.பி.



.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரவில்லை. தமது சொந்த நிகழ்ச்சி நிரலான வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மேலும் மாற்றியமைக்கவும் மொழி, கலாசார ரீதியான அடையாளங்களை இல்லாதொழிப்பதற்குமே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வியாழன், 14 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திங்கள், 21 ஜனவரி, 2013

'தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி'


நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்தியாவின் அழுத்தத்துடன் அங்கத்துவம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

வடக்கில் சிங்கள பரம்பலை விருத்தி செய்ய முயற்சி: சம்பந்தன் எம்.பி.


வடக்கில் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்ற அரசாங்கம் அங்கு இராணுவக் குடும்பங்களை நிரந்தரமாகக் குடியேற்றி சிங்களக் குடிப்பரம்பலை விருத்தி செய்யவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம் சாட்டினார்.

புதன், 10 அக்டோபர், 2012

கூட்டமைப்பு தொடர்பான அமைச்சர் பஷிலின்கருத்து நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி: சம்பந்தன்



ரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் இறைமையை உதாசீனம்செய்த ஹக்கீம் பதில் சொல்லியே ஆகவேண்டும்: சம்பந்தன்



தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயகம் இறைமையின் ஓர் அம்சம் இது மக்களுக்குரியது ௭னத் தமி ழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திரு கோணமலை மாவட்ட பாராளுமன்ற உ று ப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவி த் தா ர்

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள்: தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் முறைப்பாடு



கி ழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நீல நிறச்சட்டை அணிந்தவர்கள் பலர் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வருவதாக தமக்கு புகார்கள் கிடைத்துள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும்: சம்பந்தன் கோரிக்கை



லங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்ளுர் தீர்வுகள் பல உருவாக்கப்பட்டன. அவை அமுல்படுத்தப்படவில்லை என்பதால் உள்நாட்டுத் தீர்வு இங்கு பொருந்தாது என்பதுடன் இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்



போர்க்குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற் படுத்தப் போகின் றீர்களா அல் லது தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல் லி ணக்கம், புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமா தானத்தையும் ஏற் படுத் தப் போகின் றீர்களா ௭ன் பதற்கு அர சாங் கமே பதிலளிக்க வேண்டும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலை வரும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப் பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவற்கான தேசிய செயற்திட்டம் குறித்து தெரியாது: சம்பந்தன்



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கென வரையப்பட்டுள்ள தேசிய செயற்திட்டத்தை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

திங்கள், 16 ஜூலை, 2012

அடிமைகளாக வாழ தயார் இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் தேர்தல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்: சம்பந்தன்



மிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் அடிமைகளாக மற்றும் இரண்டாம் தரப்பிரஸைகளாக வாழ்வதற்கு தயாராக இல்லை என்பதை கிழக்கு மாகாண சபைத்தேர்தல் மூலம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சனி, 30 ஜூன், 2012

அரசியல் தீர்வில் இந்திய ஈடுபாட்டின் மற்றொரு படி: மேனனின் விஜயம் குறித்து சம்பந்தன்


மிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் ஈடுபாடு மேலும் நெருக்கமடைவதற்கான ஒரு படியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயத்தை தான் நோக்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

வெள்ளி, 1 ஜூன், 2012

த.தே.கூட்டமைப்பில் பிளவு இல்லை: சம்பந்தன்



டகங்கள் சிலவற்றில் கூறப்படுவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் எதுவும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

அரசுடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை : இரா. சம்பந்தன்


ரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

தமிழர் பகுதிகளில் ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடக்கக் கூடாது என்பதில் மட்டும் அரசு உறுதி : சம்பந்தன்


ழிந்துபோன புலிகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் உயிருடன் இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இருக்கும் அதிகாரம் வேண்டும். எனினும், அரசாங்கம் 6 தசாப்தங்களாக பின்பற்றிய அணுகுமுறையை@ய இன்னும் தொடர்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.

வியாழன், 1 மார்ச், 2012

ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தன் அவசர கடிதம்


.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 47 உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். பெப்ரவரி 27 என திகதியிடப்பட்ட இக்கடிதம் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

புதன், 1 பிப்ரவரி, 2012

போவோம் ஆனா போகமாட்டோம் _


ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று வீரகேசரிக்கு தெரிவித்தார்.