வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 ஏப்ரல், 2012

தமிழர் பகுதிகளில் ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடக்கக் கூடாது என்பதில் மட்டும் அரசு உறுதி : சம்பந்தன்


ழிந்துபோன புலிகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் உயிருடன் இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இருக்கும் அதிகாரம் வேண்டும். எனினும், அரசாங்கம் 6 தசாப்தங்களாக பின்பற்றிய அணுகுமுறையை@ய இன்னும் தொடர்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்ப் பகுதிகளில் ஜனநாயகம் நிலைநாட்டப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் அவதானமாக இருக்கின்றது. அதிகாரப்பகிர்வு குறித்து கதையளக்க வேண்டாம் என்பதுடன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடங்களில் இரண்டாம் தர பிரஜையாக வாழமுடியாது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’