WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு அமைச்சும் மேற்கொண்ட செயற்பாடுகளை மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்
சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பிரதேச அபிவிருத்தியிலும் நாம் கூடிய கவனமெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் இந்து ஆலயங்கள் சிலவற்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாதவர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. இது விடயமாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்குச் சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி கிரி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டதுடன், மகா சங்கதேரர் மற்றும் அலுத்வேவ சோரத்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார்
கிறிஸ்மஸ்தீவில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்களில் இருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார்
யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடவே கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுவிப்பதற்கு விநயமாக உதவுமாறு கோரி கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் தெரிவித்துள்ளார்
இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.
வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மூன்றாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.
மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் ஐந்து மாதங்களில் நாடுமுழுவதும் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனின் (கே.பி.) பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வதற்கு மேற்படி ஒன்றியத்திலுள்ள சில தமிழ்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன
சினிமாவில் காதல் படம், காதல் பட நாயகன் என்றால் உடனே முரளிதான் நினைவுக்கு வருவார். நல்ல நடிகராக, நல்ல குடும்பத் தலைவராக, நல்ல தந்தையாக இருந்தவர் முரளி என்று மறைந்த நடிகர் முரளிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரோஜாதேவி
பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படையினரும் யாழ். மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினரும் இணைந்து படையினர் பொதுமக்கள் வெற்றிக்கிண்ணத்துக்கான 20:20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற மூவின மக்களாலும் கட்டியெழுப்ப பட்ட ஜக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க குட்டிச்சுவராக்கி விட்டதாக பதுளை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அப்பல்கலைக்கழத்தின் மற்றொரு மாணவனான இந்திக பஸ்நாயக்க அல்லது பஸ்ஸா பதுளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்
வனியாவிலுள்ள 211ஆம் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இன்று ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
3000இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வர்த்த சேவைகளை மூன்றாம் தரப்புக்கு வழங்குதல்- அவுட் சோர்ஸிங், கோல்சென்ரர் துறைகளில் பயிற்சியளிக்கும் திட்டத்தை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் (யூ.எஸ்.எயிட்) இடைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது
யாழ்ப்பாணத்தின் தட்டார் தெருவில் வசித்து வந்த 47 வயதுடைய க.விஜயலட்சுமி என்பவரை அவரின் சொந்தச் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் சொத்துக்களை அபகரிக்கின்றமைக்காகப் படுகொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.
ஆயினும் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இப்படுகொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பிய விஜயலட்சுமி
இலங்கை பங்குச் சந்தையின் முக்கிய சுட்டெண்ணான அனைத்துப் பங்குச் சுட்டெண் முதல் தடவையாக 6000 புள்ளிகளை தாண்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
யுத்தம் முடிவடைந்தபின் ஒருவருடங்களுக்கு மேலான காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தனது நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எதிர்வரும் நவம்பர் மாதத்ததுடன் அங்குள்ள தனது அலுவலகத்தை மூடவுள்ளது
இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1080 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேறுவதற்காக இன்றைய தினம் (9) அழைத்துச் செல்லப்பட்டனர்
இலங்கையில் பான் எனப்படும் 450 கிராம் எடையுடைய பிரெட்டின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு இராத்தலுக்கு மூன்று ரூபாய்கள் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜெயவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம், நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன் என ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
தன்னை சிறையில் தள்ளுவதற்கும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிரான இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகா இன்று கூறினார்
சில ஊடகங்கள் தாம் செய்தி வெளியிடும் முறையை தொடர்ந்து மேற்கொண்டால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நிலையை அவை எதிர்நோக்க நேரிடும் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்
2500ரூபா கொள்ளையடித்த பொதுமகன் ஒருவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் கடவுச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கே.பி.யை சதந்திரமாக நாட்டில் நடமாட விட்டு இருக்கின்றீர்கள். இது எவ்விதத்தில் நாயம். என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 பேர் காணாமல் போயிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.செல்வராசா தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
24வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
7வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தென் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சறோஜினி குஷலா வீரவர்தன இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களிலிருந்து சீருடை அணிந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக்கூறப்படும் 186 பேரின் இருபதாம் ஆண்டு நினைவு கூறல் வியாழனன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்
அரசாங்கத்தில் நேற்று புதன்கிழமை இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஊர்வலமொன்றில் கலந்து கொள்வதற்காக ஹெலிகொப்டர் மூலம் மஹியங்கனைக்கு சென்றுள்ளார்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிறித்தவ திருச்சபையின் பாதிரியார் எதிர்வரும் சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்திருப்பதற்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன
எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்
கொங்கோ கிழக்கு ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்ற பாரியளவிலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணியாளர்கள் தவறியுள்ளதாக ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி அதுல் ஹா தெரிவித்தார்
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்