வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஏப்ரல், 2013

இன்று வருகின்ற இந்திய எம்.பி.க்கள் குழு கூட்டமைப்பை சந்திக்கும்



நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆறு பேரைக்கொண்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகின்றது.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை


நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகியது.

வெள்ளி, 9 நவம்பர், 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச வேண்டுமாம்: செல்வராசா எம்.பி.



2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேநீர் இடைவேளையின்போது உரையாடுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முன் அரைப்பகுதிக்கு மு.கா.வுக்கு வழங்க த.தே.கூ. இணக்கம்



ரண்டு கட்சிகளும் கூட்டு நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்படின் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை உரிய காலத்தின் முன் அரைப்பகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தல்



கிழக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேர்தல்கள் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு எழுதிய கடிதத்தில் சில அரசியல் கட்சிகளுக்கும்; தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 12 மார்ச், 2012

த.தே.கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி: இரா.சம்பந்தன்


மிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பேச்சில் முன்னேற்றம் இன்றேல் தெரிவுக்குழுவில் இடம்பெறோம்: ஜனாதிபதியிடம் சம்பந்தன் தெரிவிப்பு


மிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நடைபெற்றுவருகின்ற பேச்சுக்களின் தீர்க்கமான கட்டத்தினை அடையாதவிடத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நாங்கள் பெயர் கொடுக்க மாட்டோம் என சம்பந்தன் எம்பி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

சனி, 21 ஜனவரி, 2012

காலத்தை இழுத்தடிக்கிறது அரசு: சுரேஷ் எம்.பி.


ரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – நாடாளுமன்ற தேர்வுக்குழு என்ற திடீர் மாற்றத்தினால் தாமதமடைந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கத்தின் இந்த இடையீடு குறித்து தம்மோடு அரசு பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

கூட்டமைப்பு பதிவு: எப்போது முடியும் இழுபறி?


நேகமாக அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை


ட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதன், 7 டிசம்பர், 2011

மூன்று விடயங்கள் தொடர்பில் மீண்டும் அரசுடன் பேசுவோம்: சுமந்திரன் எம்.பி.


நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  தெரிவித்தார்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

முறிந்துவிட்டதாகக் கூறப்பட்ட அரசு - ததேகூ பேச்சுவார்த்தை இன்று மீண்டும்!


டந்த சில தினங்களுக்கு முன் முறிந்து விட்டதாகக் கூறப்பட்ட அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

வெள்ளி, 18 நவம்பர், 2011

நிறைவேற்று, நீதி, சட்டமியற்றும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : த.தே.கூட்டமைப்பு


டக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சட்ட, நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 அக்டோபர், 2011

யாழ். பல்கலை மாணவ பேரவைத் தலைவர் மீதான தாக்குதலுக்கு த.தே.கூட்டமைப்பு கண்டனம்


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்ச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அரசுடன் கட்டம் கட்டமான பேச்சு என்பது பொய்: சம்பந்தன்

மிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு கட்டம் கட்டமாக இடம்பெறுமென்றும் எடுக்கப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே அங்கீகரிக்கப்படுமெனவும் வெளிவந்த செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளார்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கூட்டமைப்பு எம்.பிகள் இருவர் மீது அரசாங்க விசாரணை ஆரம்பம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 12 ஜூலை, 2011

கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

புதன், 25 மே, 2011

இராணுவ முகாம்களை நிறுவுவதை கைவிடவேண்டும்: த.தே.கூ

நா டு முழுவதிலும் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமானது தற்போதிருக்கும் குடும்ப ஆட்சியை எதிர்காலத்தில் இராணுவ ஆட்சியாக மாற்றியமைப்பதற்கான முதற்கட்டமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வெள்ளி, 20 மே, 2011

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புண்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம்: த.தே.கூ

யு த்தம் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு வருட பூர்த்தியை ஒரு மாதத்திற்கு கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது பொய்யான முகத்தைச் சுட்டிக் காட்டுகின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை வஞ்சித்து மீண்டும் மீண்டும் புண்படுத்தும் காரியங்களையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம். பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.

சனி, 14 மே, 2011

அரசாங்கத்தின் செனட் சபை திட்டம் அதிகாரப் பகிர்வுக்கு ஈடாக அமையாது: த.தே.கூ

ரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் செனட் சபை திட்டமானது தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வுக்கு ஈடானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ அமையாது என்பதை அரச தரப்புக்கு தெளிவுபடக் கூறிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.