வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வவுனியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவுனியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2013

கடத்தப்பட்ட எனது மகன் உயிருடன் இருக்கிறான், மறைத்து வைத்திருக்கும் அவனை மீட்டுத்தாருங்கள்


பூசா முகாமிலிருந்தும் வவுனியா முகாமிலிருந்தும் எனது பிள்ளை இருப்பதாக கடிதம் வந்தது. விசாரணைகள் முடிந்து விட்டன. ஆனால் 5 வருடமாகிவிட்ட நிலையிலும் இதுவரை எனது பிள்ளையை காட்டவில்லை. ஆனால் எனது பிள்ளை உயிருடன் இருக்கின்றது. எனது பிள்ளையை மீட்டுத்தாருங்கள்' என கடத்தப்பட்ட மகனின் தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

புதன், 30 ஜனவரி, 2013

இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


ந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

வியாழன், 10 ஜனவரி, 2013

இராணுவ வீரரின் சடலம் மீட்பு


வுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

திங்கள், 24 டிசம்பர், 2012

வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனம்


சீ ரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர அறிவித்துள்ளார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


மிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஏற்பாடு செய்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்த மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 8 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியுள்ளனர்.

புதன், 5 டிசம்பர், 2012

பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு


வுனியா பிரதேசத்தை பாடசாலை மாணவியொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

தமிழ் யுவதிகள் 100 பேர் இலங்கை இராணுவத்தில் சேர்ப்பு


தமிழ் யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் பணம் 20 கோடி ரூபா மீட்பு



மிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட பணம் 20 கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை



ர்வதேச காணாமற் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமற் போனோரின் உறவினர்களால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளி, 29 ஜூன், 2012

சிறையதிகாரிகள் மீட்கப்பட்டனர்



வுனியா சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான கைதிகளால் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்த சிறையதிகாரிகள் மூவர் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 11 மே, 2012

புலிகளின் புலனாய்வுப் பிரிவு மேஜர் வவுனியாவில் கைது



யுத்த காலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் துப்பாக்கிப் பிரிவு ஆகியவற்றில் மேஜர் பதவிநிலை வகித்த ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கள், 16 ஏப்ரல், 2012

16 வயது யுவதியுடன் தங்கியிருந்த 67 வயது நபர், ஹோட்டல் உரிமையாளர் விளக்கமறியலில்


16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

சனி, 25 பிப்ரவரி, 2012

முன்னாள் புலி இயக்கப் போராளிகள் வவுனியா சிறை அதிகாரிகள் மீது தாக்குதல்


மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகள் மீது இன்று (25) தாக்குதலை நடத்தினர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

வவுனியாவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை


மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஆர்ப்பாட்டத்திற்காக யாழ். சென்ற ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு வவுனியாவில் தடுப்பு


யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்கு கொழும்பிலிருந்து சென்றவர்கள், வவுனியாவில் வைத்து தடுக்கப்பட்டனர்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

குண்டு வெடிப்பில் அறுவர் படுகாயம்


வுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

புதன், 7 டிசம்பர், 2011

வவுனியா பகுதியில் பதிவு நடவடிக்கை; கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் முறைப்பாடு


வுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடு வீடாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கல்மடு பிரதேசத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


வுனியா, கல்மடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்களை இன்று வியாழக்கிழமை மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

வவுனியாவில் மர்ம மனிதர்களின் தாக்குதலில் மதபோதகர், கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் காயம்


வுனியாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மத போதகர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

பஸ்ஸில் குழந்தையை கைவிட்டு தலைமறைவான பெண்

வுனியாவில் தாயால் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிசுவொன்று பொலிஸாரின் உதவியுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.