-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
புதன், 11 ஜூலை, 2012
செவ்வாய், 20 டிசம்பர், 2011
காணி அதிகாரத்தை த.தே.கூ. மீண்டும் வலியுறுத்தியது
காணி அதிகாரமானது அதிகாரப் பகிர்வின் மையமாக இருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத் தூதுக்குழுவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தபோது த.தே.கூட்டமைப்பு இக்கோரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இது தொடர்பாக டெய்லி மிரருக்கு
புதன், 6 ஜூலை, 2011
திங்கள், 14 மார்ச், 2011
வெள்ளி, 9 ஜூலை, 2010
உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்-த.தே.கூ
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உறுதியளித்தபடி மீளக்குடியேற்றுமாறும் உரிய அரசியல் தீர்வைக் காணுமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்துப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சனி, 3 ஜூலை, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ததன் காரணமாக தமிழரசுக் கட்சிக்குள் முறுகல்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலங்கையின் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் செயலகத்தில் நேற்று முன்நாள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தமிழரக் கட்சியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளி, 2 ஜூலை, 2010
அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா விஜயம்!
இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.
செவ்வாய், 4 மே, 2010
த.கூட்டமைப்பும் மு.கா.வும் பாராளுமன்றில் இன்று சந்தித்து பேச்சு
தமிழ், முஸ்லிம் மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தி சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுதல், அரசியல் தீர்வு மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது குறித்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஞாயிறு, 28 மார்ச், 2010
மட்டக்களப்பில் பொதுமக்கள் மீது முதலமைச்சர் பிள்ளையான் குழு தாக்குதல்
மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வியாழன், 25 மார்ச், 2010
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் த.தே.கூட்டமைப்பையும் இலங்கை அரசு அழிக்க முற்பட்டிருக்கிறது : செல்வம் அடைக்கலநாதன்
இலங்கை அரசு தமிழ் தேசியத்தை நேசித்த பலரை படுகொலை செய்ததுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்போது போராடி வரும் ஒரே ஒரு அமைப்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழித்து விடுவதற்கும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட தலைமை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
வெள்ளி, 12 மார்ச், 2010
ததேகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வு இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு, கிழக்கில் பின்னடைவு ஏற்படும்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியும், இந்தமுறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்திக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபியின் ஆதரவுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா, வடக்குகிழக்கில் 571 ஆயிரத்து 67 வாக்குகளை பெற்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 345 ஆயிரத்து 221 வாக்குகளையே பெற்றிருந்தார்.
இந்தநிலையில் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாவும் பிரிந்த நிலையில் செயற்படுவதால் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்.
அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற 22 ஆசனங்களுக்கு பதிலாக 10 ஆசனங்கள் வரையிலேயே பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு 22 ஆசனங்களை பெற்றது.
எனினும் தற்போது அந்தக் கூடடமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சிவாஜிலிங்கம் - ஸ்ரீகாந்தா கூட்டு, சிவநாதன் கிசோர்- தங்கேஸ்வரி – கனகரட்னம் கூட்டு, என மூன்று குழுக்கள் பிரிந்துள்ளன.
மறுபுறத்தில் கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்புகள் களத்தில் உள்ளன. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான புளொட் என்பனவும் அதிகளவான தமிழ் சுயேட்சைக்குழுக்களும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.
எனவே இவையாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களுக்கு அச்சுறுத்தலாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து வடக்குகிழக்கில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_க்கு உரிய பலன்கள் கிடைக்கும் என எதி;ர்பார்க்கப்படுகிறது
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய முகம்கள் பல களத்தில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகம்கள் அறிமுகப் படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக அறி முகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகம்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தமிழரசுக் கட்சி செயலாளர் குலநாயகம், சட்டத்தரணி ரெமேடியஸ், யாழ்.பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், யாழ்.பல்கலைக் கழக மாணவன், நல்லூர் ஆசிரியர் ஒருவர், சாவகச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சியின் பாடசாலை அதிபர், தமிழர சுக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
இது தொடர்பான இறுதி முடிபு இன்று ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்கும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியுடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் உத்தியை அரசு உட்பட பல் வேறு தரப்பினரும் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றினை கருத்தில் கொண்டு யாழ். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்தல் களத்தில் ஈடுபடுத்த கூட்டமைப்பு முடிபு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சிவாஜிலிங்கத்தின் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆளும் தரப்பினர் எவரும் வெற்றி கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கஜேந்திரகுமார் பொன்னப்பலம் முரண்பாடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரதான தலைவர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் நேற்று முறுகல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால், பிரேரிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.
பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை வலியுறுத்தவேண்டும்
என அவர் விடுத்த கோரிக்கையை சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தநிலையில் அவர் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு அவரை சாந்தப்படுத்தி, தேர்தல் விஞ்ஞாபனத்தில், அவரின் கொள்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்களை செய்யாமல், பொதுத்தேர்தலில் 'வெற்றிபெற்றால், இனப்பிரச்சினை தீர்வுக்காக பாடுபடுவோம்" என்ற வசனம் மாத்திரம் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்த மாற்றத்திலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
புதன், 3 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதுடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் சிபார்சு செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதன் கொள்கைகளை முற்றாக கைவிட்டு தமிழ் தேசியம் பேசியபடி உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் இறைமையையும் ஏற்றுக் கொண்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரிக்க முற்பட்ட பொழுது அதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர் என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் திடீரென சனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் தேசிய எண்ணக்கருவை சிதைக்கும் நோக்கில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தபொழுது அந்த முடிவை கடுமையாக எதிர்த்து கூட்டமைப்பு தலைமைப்பீடத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக இருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.
இவர்களில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தனித்து செய்ற்பட்ட காரணத்தினால் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்று சம்பந்தன் தீர்மானத்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதேவேளை தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடிய உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது என்று நம்பகமாக அறிய முடிகின்றது.
அவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுக்கும் போது அதனால் பொது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமைப் பீடத்தின் மேல் ஏற்படக் கூடிய அதிருப்தியை சமாளிப்பதற்காக ஒரு தமிழ் ஊடகம் ஒன்றின் உதவியுடன் முன்கூட்டியே சில உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணம் இனிவரும் நாட்களில் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாகவும் 76 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாகவும், 77 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாக தயாரித்து வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தடையாக இருக்க கூடியவர்கள் என்று கருதப்படும் அரசியல் கட்சிகள் எதனையும் சாராத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களை இல்லாமல் தடுப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து தமது திட்டத்திற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ஞாயிறு, 10 ஜனவரி, 2010
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் எடுத்துரைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வருடாந்த தேசிய மாநாடு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம்,சட்டநாதர் கோவிலடி இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கல நாதன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் உரையாற்றினர். இலங்கை தமிழரசுக் கட்சியின் 60 ஆம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வருடாந்த தேசிய மாநாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்காலத்தில் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பலரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வருங்காலத்திலான அகிம்சை வழியிலான கொள்கைகள் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பான தீர்வுகளைப் பெறுவதற்காகப் போராடுதல் போன்ற விடயங்கள் பற்றிக் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
ஜனாதிபதி தேர்தல் குறித்து த.தே.கூ. நாளை மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதில் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மீண்டும் கொழும்பில் கூடி எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து ஆராயவிருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள போதிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கும் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் சந்திப்புகள் இடம்பெற்ற பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை கூடவிருக்கின்றது.
நாளைய கூட்டத்தில் இச்சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதோடு இது பற்றி தலைவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிய வருகின்றது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) கட்சியின் தீர்மானத்தை மீறி போட்டியிடுவது, தேர்தல் பகிஷ்கரிப்பு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவிருக்கின்றது.
இருப்பினும் நளைய கூட்டத்திலும் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கக் கூடிய வாயப்புகள் இருக்காது போல் தெரிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதே வேளை தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் ,அவருக்கு எதிராக தமது கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருப்பது குறித்து டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தரை சந்தித்து தெளிவு படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.
ஞாயிறு, 27 டிசம்பர், 2009
த.தே.கூட்டமைப்பு ஐ.தேகட்சிகளுக்கிடையான பேச்சுவார்த்தைகள் வெற்றி?!

இடம்பெறபோகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு தனது ஆதரவை வழங்கப்போகிறது என்பது குறித்து பல வட்டாரங்கள் பலகட்டங்களாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஆளும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றுடன் பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நடத்திவருகிறது இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது இப்பேச்சுக்களில் த.தே.கூட்டமைப்பு சார்பில் அதன் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றம் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வசிப்பிடத்தில் இப்பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. ததேகூட்டமைப்பினரின் முடிவே தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்குமெனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவசரமாக கூடுகிறது!

கட்சிக்குள் தோன்றியுள்ள சி;க்கல்நிலை குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் ஆராய்வதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு இவ்வாரம் அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட வெளிநாட்டுக்கு சென்றிருந்த எம்பிக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின் போது கட்சியின் பல கோரிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விவாதிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் அடுத்துவரும் நாட்களில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இருவேட்பாளர்களின் வட்டாரங்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இதேவேளை கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல்நிலை குறித்தும் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அந்த மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி எவ்வித முடிவினையும் எடுக்காது. ஒருசிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்மக்கள் குழப்பமான நிலையை அடையத் தேவையில்லை கட்சிக்குள் எழுந்துள்ள நிலை தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படும் எமது கட்சியை சேர்ந்த அனைவரும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மதிப்பவர்கள் அதனை தொடர்ந்து பேணவேண்டியது எமதுகடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















.jpg)

