வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


டக அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கறுப்பு ஜனவரி ஆர்ப்பாட்ட பேரணியும் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.

வெள்ளி, 30 நவம்பர், 2012

கொழும்பில் தீச் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்


காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

புதன், 31 அக்டோபர், 2012

கொழும்பிலும் வெள்ளம்



கொழும்பில் இன்று புதன்கிழமை மாலை பெய்த அடை மழையினால் கின்சி வீதி, நகர மண்டபம், தும்முள்ள சந்தி, டார்லி வீதி மற்றும் இப்பான்வல ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சனி, 15 செப்டம்பர், 2012

கருணா குழு உறுப்பினர்களை கொல்ல முயற்சித்ததாக இருவர் மீது வழக்கு



வெ ள்ளவத்தையில் 01.01.2004ஆம் ஆண்டு தொடக்கம் 25.10.2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கருணா குழுவின் நால்வரை கொலை செய்ய முயன்றாரென குற்றம் சுமத்தி இருவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இலங்கை -இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிக்க இருநாடுகளும் நடவடிக்கை



2017 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டித்து 9 பில்லியன் டொலர் அளவுக்கு உயர்த்தவும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (சீபா) விரைவில் அமுலாக்கவும் இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய வர்த்தக, கைத்தொழில்; அமைச்சரான ஆனந்த சர்மா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாளை 3 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.

வியாழன், 19 ஜூலை, 2012

67 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு இடைமறிப்பு



வென்னப்புவவிலிருந்து 8 கடல் மைல்களுக்கு அப்பால் 67 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற மற்றுமொரு படகு நேற்று புதன்கிழமை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 1 ஜூன், 2012

கொழும்பில் விபசார விடுதி முற்றுகை; 18 பேர் கைது



கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் உள்ள இரவு நேர விடுதியொன்றை நேற்று வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டபோது, பாலியல் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பெண்கள் உட்பட 18 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வெள்ளி, 25 மே, 2012

கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில்



நாட்டின் பல பாகங்களிலும்; இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து அமரசேகர மாவத்தை, துன்முல்ல, ஹோட்டன் பிளேஸ், ரவுன்கோல் உட்பட கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன், 22 பிப்ரவரி, 2012

பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள கடைகள், காட்சியறைகள், சுப்பர்மார்க்கெட்டுக்கள் ஆகியவற்றில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட 22 சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்த பாரிய கொள்ளைக் கோஷ்டிகளுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வியாழன், 5 ஜனவரி, 2012

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த நினைவுச் சிலையொன்றை பெற்றோல் குண்டு வீசி சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

டந்த சில தினங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக இத்திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் கூறினார்.

புதன், 14 செப்டம்பர், 2011

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் யாழ்ப்பாணம் சிறையிலும் கைதிகள் மீது தாக்குதல் _

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் யாழ். சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

வியாழன், 8 செப்டம்பர், 2011

பாதாள உலகக் கோஷ்டி தலைவர் சுட்டுக் கொலை

கொழும்பு, ஆமர்வீதியில் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின்போது நன்கறியப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய தலைவரான 'களு துஷார' சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மாணவியை துஷ்பிரயோகம் செய்து படம்பிடித்த நீச்சல் பயிற்றுநருக்கு வலைவீச்சு


கொழும்பு வடக்கிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் அக்காட்சியை செல்லிடத் தொலைபேசியில் படம்பிடித்து வெளியிட்டதாக கூறப்படும் அப்பாடசாலையின் இளம் நீச்சல் பயிற்றுநர் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 3 ஜூன், 2011

கொழும்பில் பிக்குமார்கள் ஆர்ப்பாட்டம்

ட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு 07இல் பிக்குமார்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

வியாழன், 24 மார்ச், 2011

லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு)

லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, கெத்தாராம பகுதிகளுக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த இராணுவத்தினர் பதிவு விண்ணப்பங்களைக் கொடுத்து குடும்ப விபரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

புலி சந்தேக நபர்கள் என இந்திய பிரஜைகள் இருவர் கொழும்பில் கைது

விசா இன்றி கொழும்பில் தங்கி இருந்த இரு இந்தியப் பிரஜைகள் புலிப் பயங்கரவாதத்துடன் தொடர் புடையவர்கள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

விசா அனுமதியின்றி கொழும்பில் தங்கியிருந்த புலி சந்தேகநபர் கைது

லங்கையில் விசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான முத்துசாமி இளங்கோவன் (சாமி) என்பவர் கொழும்பு, கதிரேசன் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளார்.

கொழும்பில் வெடிப்பு சம்பவம்; 10 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் கப்பல் கட்டும் தளமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.