வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

அமெரிக்க அதிகாரிகள் யாழ். விஜயம்



லங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மேற்படி கல்விச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள், 10 டிசம்பர், 2012

யாழ். பல்கலை மாணவர் எழுவர் விடுதலை


யங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஏழு பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 28 நவம்பர், 2012

யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடி?


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

யாழ்.நகரப் பகுதியில் இடம் பெற்ற திருட்டுகள் தொடர்பாக மூவர் கைது



யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி, சங்கிலித் திருட்டுகள் தொடர்பாக மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மோட்டார் சைக்கிள்களில் ஆளரவமற்ற இடத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அறுத்துச்செல்வதில் இந்தக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்கள் .

புதன், 14 செப்டம்பர், 2011

நல்லூர்த் திருவிழாவில் காணாமல்போன சிறுமி கண்டுபிடிப்பு

யாழ். நல்லூர்த் திருவிழாவின்போது காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கோப்பாய்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கோப்பாயில் தூக்கில் தொங்கிய சடலங்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டுள்ளன: வைத்திய அதிகாரி

யாழ். கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண் இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் உடல்களில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.

சனி, 16 ஜூலை, 2011

யாழில் இளம்பெண் வெட்டிக்கொலை

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

திங்கள், 20 ஜூன், 2011

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

யா ழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பங்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

இராணுவ நலன்புரி கடை தீப்பற்றியது

யா
ழ் ஆரியகுளம் சந்தியிலுள்ள இராணுவ நலன்புரி கடை சற்றுமுன் தீப்பற்றியுள்ளது.

வியாழன், 6 ஜனவரி, 2011

யாழில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு விசமிகள் தீமூட்டல்

யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

யாழில் கணவனை காணவில்லையென மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு

நேற்று காலை உரும்பிராய் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

புதன், 29 டிசம்பர், 2010

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 16 டிசம்பர், 2010

யாழில் பட்டப்பகலில் மூவர் மீது வாள்வெட்டு

யாழ். நகரின் மத்திய பகுதியில் இடம் பெற்ற கைகலப் பின்போது மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், 11 நவம்பர், 2010

அளவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

யாழ். அளவெட்டி அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சஞ்சீவ் (24 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

புதன், 7 ஜூலை, 2010

யாழ். சித்தன்கேணியில், ஆயுதமுனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் கொள்ளை

யாழ். சித்தன்கேணியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்நாள் அதிகாலை 2 மணிக்கு சென்ற இனந்தெரியாத குழு ஒன்று, ஆயுதமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி நகைகள், பணம், கைத்தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

திங்கள், 5 ஜூலை, 2010

யாழ். வட்டுக்கோட்டையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் பலி

யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய், 18 மே, 2010

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து முன்னாள் புலி உறுப்பினர்கள் 600 பேர் இன்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்


முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்கள் 600பேர்களை இன்று அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முற்பகல் 10மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

புதன், 12 மே, 2010

வானில் ஏற்றிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு மாணவி அடிகாயங்களுடன் ஆஸ்பத்திரியில்!//காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்மணி வல்லைவெளிப் பற்றைக்குள்! அவர் மீட்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில்



பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும், மாணவியின் வாயில் ஏதோ திராவகம் ஊற்றப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

திங்கள், 10 மே, 2010

வடமராட்சி குடத்தனை முகாம் மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 155 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.