வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரபா கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபா கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மார்ச், 2013

'ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு புஷ்வானம்'


ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை முகத்தை கண்டுகொண்டோமேயொழிய அந்த தீர்மானத்தின் மூலமாக தமிழ் மக்கள் எவ்வித பிரயோஜனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதுதான் உண்மையாகும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

எதிரணி கூட்டு நகைச்சுவை நாடகம்: பிரபா


ரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணி என்று சொல்லப்படுபவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூட்டணி நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதியாக தென்படுகிறது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

திங்கள், 7 ஜனவரி, 2013

பிரபா கணேசனும் ஆதரவாக வாக்களிப்பார்


ல திருத்தங்களுடனும் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக்குழு தீர்மானித்துள்ளது.

வியாழன், 22 நவம்பர், 2012

அஸ்வரின் நடவடிக்கை அறுவறுப்பானது: பிரபா


நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது கருத்துக்களை கூறும் பொழுது சிறுபான்மை மக்களின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஸ்வர் எம்.பியின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அறுவறுப்பாக இருக்கின்றது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பிறநாடுகளில் அகதி அந்தஸ்து கோருமளவுக்கு நாட்டில் பிரச்சினை இல்லை: பிரபா எம்.பி.



யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் தமிழர்களின் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறான சட்ட விரோதமான செயல்பாடுகளினால் உயிரிழக்கும் அபாயமும் பெருகி வருகிறது. ஆகையால் இப்படியான சட்டவிரோத பயணத்தை தவிர்க்குமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறநாடுகளில் அகதி அந்தஸ்து கோருமளவுக்கு நாட்டில் பிரச்சினை இல்லை: பிரபா எம்.பி.



யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் தமிழர்களின் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறான சட்ட விரோதமான செயல்பாடுகளினால் உயிரிழக்கும் அபாயமும் பெருகி வருகிறது. ஆகையால் இப்படியான சட்டவிரோத பயணத்தை தவிர்க்குமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிட்டால்தான் இரத்த ஆறு ஓடும்: பிக்கு முன்னணிக்கு பிரபா எம்.பி. பதில்


காணி, பொலிஸ் அதிகாரங்களால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று தேசிய பிக்குகள் முன்னணி தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். அவரது மடமைத்தனத்தை அக்கருத்து வெளிப்படுத்துகிறது. அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும்: பிரபா கணேசன் எம்.பி.

ரட்டை குடியுரிமை வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை குடியுரிமையை அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் புலம்பெயர்ந்த எமது தமிழ் மக்களேயாவர் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

சனி, 4 டிசம்பர், 2010

அரசியல் நிலைவரங்களை அறிந்து செயற்படுங்கள் -புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு பிரபா கணேசனின் வேண்டுகோள்

பிரித்தானியாவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிராக புலம்பெயர்ந்தவர்களில் ஒருசிலராலும் சில சிங்கள அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், அரசியல் நிலைவரங்களை அறிந்து செயற்படுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சனி, 24 ஏப்ரல், 2010

ரணில் ஒரு பச்சைத் துரோகி : பிரபா கணேசன் எம்பி _

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகமாகும்.

நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய எமது தலைவர் மனோ கணேசனின் குரலை ஒலிக்கவிடாமல் செய்துவிட்ட ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.