வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரணில் விக்கிரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 பிப்ரவரி, 2013

யாழ். தாக்குதலுக்கு ஹத்துருசிங்க காரணம்: ரணில்



வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திங்கள், 7 ஜனவரி, 2013

ஐ.தே.க.விடம் ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரணில்


டந்த வாரம் தனக்கு எதிராக எழுதிய ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதன், 19 செப்டம்பர், 2012

முஸ்லிம் காங்கிரஸ் குரானை புறந்தள்ளி மஹிந்த சிந்தனையை கையில் எடுத்துள்ளது - ரணில்



சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருக் குரைனை ஒருபக்கம் வைத்து விட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 20 மார்ச், 2012

யுத்தத்திற்கு அர்ப்பணிப்பு செய்தோர் செங்கல் சூளையில் கே.பி.யோ இராஜபோகம்


யாழ்ப்பாணத்திலோ கிளிநொச்சியிலோ முல்லைத்தீவிலோ எங்கும் வடக்கின் வசந்தத்தை காண முடியவில்லை. ஆனால் வடக்கின் வசந்தம் எவரது சட்டைப் பைக்கு போகிறதோ தெரியவில்லையென ஐ.தே.கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதன், 22 பிப்ரவரி, 2012

எரிபொருட்களின் விலையைக் குறையுங்கள் இல்லையேல் சம்பளத்தை அதிகரியுங்கள்: ரணில் _


ரிபொருட்களின் விலையேற்றத்தினால் முழு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினால் ஏனைய துறைகளை சேர்ந்தோர் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று வினவிய ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எரிபொருட்களின் விலைகளைக் குறைக்கவும் இன்றேல் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் என்று அரசாங்கத்திடம் கோரி நின்றார்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

ஊடகவியலாளர் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது? ;ரணில் கேள்வி


டகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வலியுறுத்தினார்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுவிக்கவும்


ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது ஜே.வி.பி.யோ எந்தவிதமான சதித் திட்டங்களையும் தீட்டவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறான இட்டுக் கட்டப்பட்ட கதைகளை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகா உட்பட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க் கட்சிகளின் மீது சேறு பூசும் கலாசாரத்தை அரசாங்கம் விடுவதாக இல்லை. பொதுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. கட்சியினர் ஆகியோர் இந்நாட்டில் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டியதாக அரச தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் கிடையாது. எனவே பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் அரசாங்கம் கூறி வருகின்ற காரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. கட்சி மிகவும் தெளிவான முறையில் ஜனநாயக ரீதியாக செயற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவ்வாறு ஜனநாயக ரீதியில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட அக் கட்சி மீது அரசாங்கம் வெறுமனே குற்றம் சுமத்துகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறு தினமான 27ஆம் திகதி புதன்கிழமை ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்கியிருந்த சினமன் லேக்சைட் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு எமது கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

எனவே அரசாங்கம் கூறுகின்ற பொய்யான கட்டுக் கதைகளைப் போல் அங்கு எந்தவிதமான சதித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.

அத்துடன் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் அதன் பின்னர் அமையவிருக்கும் கூட்டு அரசாங்கத்தில் என்னை நீக்கிவிட்டு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கும் ஜெனரல் பொன்சேகாவும் ஜே.வி.பி.யும் தீர்மானித்திருந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொய்க் கதையொன்றை அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

சதித் திட்டங்கள் என்று கூறுகின்ற அரசாங்கமே இவ்வாறான சதி முயற்சிகளை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜெனரல் பொன்சேகா பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் அவருடன் சேர்த்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்றார்.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்:எதிர்க்கட்சித் தலைவர் ரணில்


கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எந்த விதமான அடிப்படையும் அற்ற விதத்தில் அருவருக்கத்தக்க வகையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இங்கு சட்டம் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.இவ் விடயத்திற்கு இன்று சர்வதேசமே எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிராகரித்திருக்கின்றது.

எனவே, பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சட்டத்திற்கு முரணாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கான ஆராய்வுகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு மிகவும் நெருங்கிய ஆதரவுடன் செயற்பட்டு வருகின்ற இந்தியாவின் இந்து ஆங்கிலப் பத்திரிகை கூட ஜெனரல் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்திருப்பதுடன், இது தொடர்பில் அரசாங்கம் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு07, கேம்பிரிட்ஜ் ரெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்,

"உள்ளூர் மற்றும் சர்வதேசம் முழுதிலும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற அனைத்துத் தரப்பினரும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிகின்றனர். உலகில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இதுவே செய்தியாகவிருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா மீது சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாததன் காரணத்தால் இராணுவச் சட்டம் என்ற மாயையை உருவாக்கி, அவரது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த அருவருக்கத்தக்க செயற்பாடானது இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமையும் பறிக்கப்பட்டுள்ளதற்கு சமமானதாகும்.

இவ்விடயம் குறித்து சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இன்று செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற இந்து ஆங்கில பத்திரிகை பொதுவாக இலங்கை அரசாங்கத்திற்கு சார்பானதாகவே செயற்பட்டு வருகின்றது. அந்தப் பத்திரிகை கூட இன்று ஜெனரல் பொன்சேகாவின் கைதினைக் கண்டித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது, அவரது கைதுக்கு அரசாங்கம் கூறுகின்ற எந்தவொரு காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அத்துடன், உடனடியாக அவரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகா மிக மோசமான முறையில் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் உள்ள ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் சரியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை. அவ்வாறான அழுத்தங்களுக்கு ஊட கங்கள் உட்பட்டுள்ளன.

ஒன்றுக்கொன்று முரண்

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க ஆகியோரால் தெரிவிக்கப்படும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். இவர்களது கருத்தின்படி ஜெனரல் பொன்சேகாவின் கைது இந்நாட்டின் எந்தவொரு சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

ஜெனரல் பொன்சேகா மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவரை கைதுசெய்வதற்கு உரியமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். இராணுவ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அப்படியே இருந்தாலும் ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்படும் அளவிற்கு அவர் எந்தவித குற்றங்களையும் செய்திருக்கவில்லை.

இராணுவ சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால், அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் அதற்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. மேலும், யுத்த வெற்றியாளரான ஜெனரல் பொன்சேகா மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு செய்வது சரியானதா என்று கேட்கவிரும்புகிறேன்.

சட்டத்திற்கு உட்பட்டதல்ல

தேசிய பாதுகாப்புச் சபை, இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டதல்ல. சட்டத்திற்கு உட்படாத தேசிய பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகளையும் சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கையில், பாதுகாப்புச் சபையில் இருந்துகொண்டு அரசியல் தொடர்புகளை வைத்திருந்ததாகவே ஜெனரல் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.

பாதுகாப்புச் சபையானது சட்டத்திற்கே உட்படாத நிலையில் மேற்படி குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.

அத்துடன், மேற்படி சபையில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே செயற்பட்டு வருகிறார். அவரும் இந்த சட்டத்திற்கு உட்பட்டுள்ளார். எனவே, இங்கு ஜெனரல் பொன்சேகா மீது பொய்யான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன.

புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கே.பி. மற்றும் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சுதந்திரமாகவும் சுகபோகத்துடனும் இருக்கின்ற நிலையில், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இராணுவத் தலைவரை இன்றைய அரசாங்கம் சிறைக்குள் தள்ளியுள்ளது.

இதுதான் அரசாங்கம் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கொடுக்கின்ற கௌரவமா என்று கேட்க விரும்புகின்றேன். நேற்று யுத்த வெற்றியாளனாக இருந்த இராணுவ வீரர் இன்று அரசாங்கத்தின் பார்வையில் தேசத்துரோகியாக நோக்கப்படுகின்றார்.

இன்று அரசாங்கத் தரப்பினருக்கு எதனைக் கூறுவதென்றே தெரியாதுள்ளது. அதனால், ஜெனரல் பொன்சேகா மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பொய்களையும் கூறிவருகின்றனர்.

இங்கு அரசியலமைப்பும் அதன் பிரகாரமான சட்டங்களும் முற்றாக மீறப்பட்டுள்ளன. இராணுவ சட்டத்தின் அடிப்படையிலும் கூட ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியை இவ்வாறு கைதுசெய்வதற்கு இடமில்லை. எது இடம்பெற்றிருந்தாலும் சட்டத்தின் பிரகாரமே அது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியான ஒருவர் அரசியல்வாதிகளுடன் பேசக்கூடாது என்பது தொடர்பில் இராணுவ சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை.

இங்கு சட்டவிரோதம் இடம்பெற்றுள்ளது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

இன்று (நேற்று) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து எமது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களது பதில்களையும் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தீர்மானிப்போம்" என்றார்.

திங்கள், 25 ஜனவரி, 2010

ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர். இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு; ரணில் விக்கிரமசிங்க கேள்வி


நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மூவரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்குகொண்ட விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீ ர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும். அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியல் அமைப்பின் 31ஆம் பிரிவின் பிரகாரம் மக்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றியோ தோல்வியோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே முறையாகும். இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது டபிள்யு. இசட் 551 ரக 15 கவச வாகனங்கள் முகத்துவாரம் இராணுவ முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் இந்த வாகனங்கள் யுத்த காலத்தின்போதே பாவிக்கப்படுபவை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதுவும் தலைநகருக்குள் இவ்வாறான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்க விரும்புகிறேன்.

தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம். இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்நிலையில், வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.

இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச ஊடகங்களில் அத்தியாவசிய சேவையாளர்களை தவிர ஏனையோருக்கு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

தேர்தல் முடிவுகள் தமக்கு நிச்சயமாக தோல்வியிலேயே அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின்படி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேர்தலின் எந்த முடிவுகளையும் எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாகவே எமக்கு கிடைக்கின்றன.

எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மக்களின் தீர்ப்புகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் தொடர்பிலும் அதேவேளை, நடைபெறவிருக்கின்ற தேர்தலையும் அதன் பின்னரான நடவடிக்கைகளையும் குழப்பியடித்து வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அதற்கு இடமளிக்காதவாறு பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், வன்முறைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 2 ஜனவரி, 2010

சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிக்கை


பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் முறையினை ஏற்படுத்த வேண்டும். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கல் குறித்து நேற்று வி÷சட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர தீர்வுத் திட்டம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.:

அ. சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக்கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.:

ஆ. சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையை பேணிபாதுகாத்தல், மதத்தைப் பின்பற்றல், மொழியைப் பேணிப்பாதுகாத்து வளர்ச்சியடைச் செய்து தம் தனித்துவத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தல்.:

இ. சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.:

ஈ. தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கருமமொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.:

உ. சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்:

* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுந்திரமாகவும் தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.:

* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.:

ஊ. புதிய பாராளுமன்றத்தின் மூலம் இலங்கைவாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பு சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு சட்டத்தை அமுல்படுத்தல்.:

எ. மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்கு பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும், மத்திய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.:

ஏ. பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல், போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டு நடத்துவதற்கும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.

திங்கள், 14 டிசம்பர், 2009

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் இந்தியாவுக்கு விஜயம்


ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமானார்.

இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரிலேயே இந்த விஜயம் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, வெளி விவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் எம். கே. நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களோடு பேச்சுக்கள் நடத்தவுள்ளார்.

இதன்போது இலங்கை இந்திய ராஜதந்திர உறவுகள் மற்றும் இலங்கையில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை மாத்திரமே இந்தியாவில் தங்கியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லையென்றும் கூறப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரடங்கிய குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சனி, 5 டிசம்பர், 2009

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் இன்று பயணம்


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை இன்று ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

அன்று புலிகளுக்குப் பணம் வழங்கிய ஜனாதிபதி இன்று அவர்களின் பணத்தில் வெற்றி பெற முயற்சி : ரணில்


"2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வெற்றிபெற முயற்சிக்கின்றார்" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டத்திற்கான புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மாதம்பை அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்முறைக் கும்பல் ஒன்றினால் தீவைத்து நாசம் செய்யப்பட்ட பின் அதற்கு பதிலாக புதிய அலுவலகம் சிலாபத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"மாதம்பையில் அமைந்திருந்த எமது ரங்கே பண்டாரவின் அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன பாதாளக் கும்பலினால் தீவைத்து நாசமாக்கப்பட்டது. அதிகூடிய முறை எரித்து நாசமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகம் என்ற வகையில் பாலித ரங்கே பண்டார கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பார்.

ஆனால் ஒன்றை மட்டும் அந்த பாதாளக்கும்பல் புரிந்து கொள்ள வேண்டும். தீ வைப்பதன் மூலமோ, குண்டு வீசுவதன் மூலமோ ரங்கே பண்டாரவின் வாயை மூடிவிட முடியாது.

இன்று நாம் இந்த ராஜபக்ஷவின் தனியாட்சிக்கு முடிவு கட்ட பல கட்சிகளை இணைத்தக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம்.

ஜெனரல் சரத் பொன்சேகவின் வரவினால் இன்று இந்த அரசு தடுமாறிப் போயுள்ளது. இந்த ராஜபக்ஷவின் தனியாட்சியை, குடும்ப ஆட்சியை ஒழித்து இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த பல கட்சிகளுடன் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

2005ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்குப் பணத்தைக் கொடுத்து பதவிக்கு வந்த ராஜபக்ஷ இன்று விடுதலைப் புலிகளின் பணத்தைக் கொண்டு தேர்தலில் ஈடுபடுகின்றார். நாம் இவரின் விளையாட்டுக்களுக்குப் பயப்படப் போவதில்லை. வருகின்ற ஜனவரி 26ம் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார். இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது"என்றார்.

இவ்வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோசப் மைக்கல் பெரேரா, ஏ.ஆர். அப்துல் காதர், சம்பிக பிரேமதாச, உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பிரதேச தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தின் போது ரங்கே பண்டாரவின் www.bandaraonline.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அவரின் bandaraunp@yahoo.com மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் ஜனபலய (மக்கள் சக்தி) எனும் புத்தளம் மாவட்டத்திற்கான பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வெள்ளி, 20 நவம்பர், 2009

அரசியலமைப்பில் மாற்றம் அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு


நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர் ச்சி உட்பட நாட்டின் முன்னுள்ள ஏனைய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அரசியலமைப்பிலும் நடைமுறை அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தகுதியற்றவர்களின் அரசியல் பிரவேசத்தினால் இலங்கை அரசியலில் தகுதியுடையவர்கள் கூட தகுதியற்றவர்களாகவே தெரிகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுதிய எதிர்கால சவால்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வாறுகாராம விஹாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது. இக்காலப் பகுதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை பொருளாதாரம், சுகாதாரம் உட்பட ஏனைய துறைகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இலங்கை ஏனைய நாடுகளிடையே ஒப்பிடுகையில் பின்தள்ளப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற திட்டக் கொள்கை சரியாக அமைத்து செயற்படுத்தப்படாமையால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, நல்லாட்சிப் போன்றவை சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறினாலும் அந்த நாடுகளின் தேசிய கொள்கைகளில் என்றும் மாற்றம் ஏற்படுவதில்லை.

இவ்வாறானதொரு மாற்றமடையாத தேசியக் கொள்கை ஒன்று இலங்கைக்கு தற்போது தேவை. இலங்கையில் நல்லாட்சியை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை எவ்வாறு அடைவது என்பது தொடர்பாக புதிய கொள்கைகளை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளையே தற்போதைய அவசர தேவையாக கொண்டு பேசப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை அமைக்க வேண்டும்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படும் -எதிர்கட்சித்தலைவர் தெரிவிப்பு!


ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் சுமார் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹபரனவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாஸ போன்ற தலைவர்களைப் போன்று தாமும் இந்தநாட்டுக்கு பொருளாதாh வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார அபிவிருத்திநோக்கி நகர்த்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் புத்தஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் திட்டமிட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 3 அக்டோபர், 2009

அரசுக்கு திராணியிருந்தால் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவுசெலவு திட்டத்தை நவ. 5 ஆம் திகதி ..


அரசாங்கத்திற்கு திராணியிருந்தால் அடுத்த வருடத்துக்காக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வரவு செலவுத்திட்டத்தை நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பித்துக்காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் காலில் விழுவதைவிடுத்து உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களிடத்தில் அரசாங்கம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற கட்சியின் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக்கட்சியினராகிய நாம் ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கத் தயாரில்லை. அதனை செய்யவும் மாட்டோம். அரசாங்கமே தவறிழைத்துவிட்டு ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை அவதூறாக பேசியது. தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில்ராஜபக்ஷ, திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர்.

ஜி.எஸ்.பி.வரிச்சலுகை எமது நாட்டுக்கு கிடைப்பதன் மூலம் மூன்றில் ஒருபங்கு வருமானத்தை எம்மால் ஈட்ட முடிகின்றது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக 27 அம்ச நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றிய விதித்திருக்கின்றது. இதன்படி ஒழுகி உத்தரவாதம்அளிப்பதன் மூலம் இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் இன்று சுமார் ஒரு இலட்சம்பேர் தொழில் இழந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கின்ற 150 மில்லியன் டொலர் சலுகை இல்லாமல் போவது குறித்து கவலையடையப் போவதில்லை என்று கூறுகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தொழில் இழந்துள்ள ஒரு இலட்சம் பேரின் நிலைமைகள் என்ன என்பதை ஆராய்ந்துள்ளாரா எனக்கேட்க விரும்புகிறேன்.

2002இல் ஐக்கிய தேசியக்கட்சியினால் பாதுகாக்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்ட அனைத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தகர்த்தெறிந்து விட்டது,

அரசாங்கம் நேர்மையாக நடந்திருந்தால் எம்மிடத்தில் கேள்வி கேட்கும் உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருந்திருக்காது. இன்று நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது. தொழிற்றுறை வீழ்ச்சி, உற்பத்தி, கடற்றொழில், விவசாயம் ஆகியவற்றின் வீழ்ச்சி என சகல விடயங்களிலும் அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் இன்று அதனை மறுந்துவிட்டது. மக்களை வரிசையில் காக்க வைத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உட்பட பல அரச தலைவர்கள் நாடு இக்கட்டõன நிலைமைகளை சந்தித்த காலகட்டத்திலும் கூட வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கத் தயங்கியதில்லை. ஆனால், இன்றைய அரசாங்கத்தை நிர்வகிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு திராணியற்றவராக இருக்கின்றார். மஹிந்த சிந்தனை இன்று செயலற்றுப் போயுள்ளது என்றார்