வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மே, 2012

மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனரா?



சி றைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு இடைத்தரகர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரினர் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொன்சேகா சிறந்த போர் வீரர்; அவர் மீது ஜனாதிபதிக்கு விரோதம் இல்லை: அரசாங்கம்



முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறந்த போர் வீரராவார். அவரது திறமையைக் கருத்திற் கொண்டும், அவரது இராணுவ சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கினார் என்று அரசாங்கம் இன்று அறிவித்தது.

வியாழன், 17 மே, 2012

பொன்சேகா சனிக்கிழமை விடுதலையாவார்?



யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் தடுத்து வைத்திருப்பதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது அரசாங்கம் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. ஆகையினால், பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறியுள்ளனர். இதனையடுத்து யுத்த வெற்றியின் மூன்று ஆண்டு நிறைவில் பொன்சேகா விடுதலை ஆகும் செய்தியை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்;பார்க்கின்றோம்' என அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

புதன், 25 ஜனவரி, 2012

பொன்சேகாவின் வழக்கு தொடர்பில் கோரப்பட்ட விபரங்களை சட்டமா அதிபர் தரவில்லை : அ.நா.ஒ பிரதிநிதி


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குகளை அவதானித்து வந்த, அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐ.பி.யு) பிரதிநிதியான மார்க் றொவெல்,'சட்டமா அதிபர் பல தடவை பேசிய போதும் தான் கேட்ட விடயங்களை தனக்கு தரவில்லை' என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திங்கள், 16 ஜனவரி, 2012

நாடாளுமன்ற அமர்வில் பொன்சேகா பங்குபற்ற அனுமதி கோரும் மனு மீது ஜனவரி 31 இல் விசாரணை


நா டாளுமன்றத்தின் செயற்பாடுகளில் பங்குபற்ற தன்னை அனுமதிக்குமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த ஆணை கோரும் விண்ணப்பம் ஜனவரி 31 ஆம் திகதி விசாரிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

சனி, 19 நவம்பர், 2011

பொன்சேகா குற்றவாளியென இரு நீதிபதிகளும் நிரபராதியென ஒரு நீதிபதியும் தீர்ப்பு


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரில் ஒருவர் பொன்சேகாவுக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளிலும் அவரை நிரபராதியாகக் கண்ட அதேவேளை, ஏனைய இரு நீதிபதிகள் ஒரேயொரு குற்றச்சாட்டில் மாத்திரம் அவரை குற்றவாளியாகக் கண்டனர்.