யுத்தத்தின் கொடுமையினால் விதவைகளாக்கப்பட்டவர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது பெய்து வரும் அடைமழையினால் வடக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்கள் வெள்ளம் காரணமாக பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார அமைச்சு இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்
-
















