வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2012

எனக்கு கணிதமும் நல்லொழுக்கமும் கற்றுத் தந்தவர் யாழப்பாணத்துத் தமிழனே’


மிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் மன்னாள் ஸனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

வியாழன், 19 ஜனவரி, 2012

அப்துல் கலாம் நாளை இலங்கை விஜயம்


ந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

3ஆம் உலகமகா யுத்தம் தண்ணீரினால் உருவாகலாம் - அப்துல் கலாம்

மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 14 ஏப்ரல், 2010

உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக் காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கேள்வி இது.

திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார், இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார். தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால் கவலைப்படத் தேவையில்லை.

வியாழன், 26 நவம்பர், 2009

வெள்ளித்திரையில் அப்துல் கலாம்!


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் 'நான் அப்துல் கலாம்' என்ற பெயரில் தயாராகும் வெள்ளித் திரையில் தோன்றுகிறார்.

"இளைஞர்களே கனவு காணுங்கள்" என்று அடிக்கடி கூறும் அவரது பேச்சை ஒரு நிகழ்ச்சியில், இளம் சிறுவன் ஒருவன் கேட்கிறான். அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராக உள்ளது.

இந்தத் தகவலை குல்ஷன் குரோவர் என்பவர் தெரிவித்தார்.

"இந்தச் சினிமா பற்றி அவருக்கு நன்கு தெரியும். தெரிந்த பின்னரே அவர் வெள்ளித்திரையில் தோன்ற தனது சம்மதத்தை தெரிவித்தார்"என்றும் அவர் கூறினார். அவரும் இந்த சினிமாவில் அப்துல் கலாமுடன் நடிக்கிறார்.

ஐ.நா. சபையின் ஓர் அங்கமான 'யுனிசெப்' நிறுவனத்தின் பங்களிப்புடன், இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் இந்த சினிமா உருவாகிறது. மாதவ் பாண்டா என்ற டைரக்டர் இந்தப் படத்தை இயக்குகிறார்.