வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2011

வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவசியம்

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள மன்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கும் வரை அந்த மன்றங்கள் தொடர்பில் எவ்விதமான பிரசாரங்களையும் முன்னெடுக்கவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வடக்கில் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவசியமானது என எடுத்துரைத்துள்ளார்.

திங்கள், 15 மார்ச், 2010

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணையாளர் அறிக்கை _

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

வெள்ளி, 12 மார்ச், 2010

தேர்தல் ஆணையாளர் இன்று அரசியல் கட்சி செயலாளர்களுடன் சந்திப்பு


எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று வெள்ளிகிழமை அரசியல் கட்சிகளின் செயலாளர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

மூன்று மாதங்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு.


வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியப்படுத்தியுள்ள ஆணையாளர் சகல வேட்பாளர்களும் கட்டாயமாக பூரண சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென்பதுடன் கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீனக் குழுத் தலைவர்களின் ஊடாக சொத்து விபரங்களை வெளியிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் விபரங்களை ஒப்படைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 23 ஜனவரி, 2010

வடக்கில் மக்கள் வாக்களிக்க இலவச பஸ் சேவை


வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இலவச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஆணையாளர் மேலும் கூறுகையில்,

"வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியாவில் விசேட செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் சகல ஏற்பாடுகளையும் இச்செயலகம் கண்காணிக்கின்றது. தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1000 பஸ்கள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படும்" என்றார்.