வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழீழ விடுதலைப் புலிகளின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ விடுதலைப் புலிகளின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஐக்கிய ராச்சியத்தில் தடை செய்யப் பட்டிருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்

டந்த வார ஒக்ஸ்போட் சங்கப் படுதோல்வி இரண்டு விடயங்களைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அவையாவன

சனி, 12 ஜூன், 2010

விடுதலை புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வியாழன், 1 ஏப்ரல், 2010

புலிகள் தொலைக்காட்சி பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார் !

இலங்கை போரில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளம் 'நிதர்சனம்'.

திங்கள், 21 டிசம்பர், 2009

விடுதலை புலிகளின் ஆயுதக் கப்பல் சந்தேகத்தில் பறிமுதல்


தமிழீழ விடுதலை புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் 'பிறின்ஸஸ் கிரிஸ்டீனா' கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

83 மீற்றர் நீளமுடையதும், பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல், தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

சனி, 12 டிசம்பர், 2009

வான்படைப் போராளிகளாக இருந்த விடுதலைப்புலிகள் இருவரை டிசம்பர் மாதம் 16ம்திகதிவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு!


விடுதலைப்புலிகளின் வான்படைப் போராளிகளாக இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ள இருவர் குறித்து நேற்று வழக்கு விசாரணை நடந்துள்ளது. கொழும்பு குற்றவியல் நீதிமன்றில் நடந்த விசாரணையின் போது இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்படி இருவர் குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரையும் டிசம்பர் மாதம் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஆயிஷா ஆப்தீன் பணித்துள்ளார். பத்மநாதன் சுரேஷ், கந்தசாமி சதீஷ் ஆகிய இருவருமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டவர்கள் என்றும் அவர்கள் இருவரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கிறது. வான்படையில் இருந்த இருவரும் புலிகளின் விஷ்வமடு வான்தளத்தில் கடமையில் ஈடுபட்டவர்களாம் அத்தோடு கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளனராம் இதில் சதீஷ் என்பவர் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாகவும் அதேவேளை மந்துவில் பகுதியில் சண்டையில் ஈடுபட்டவர் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த இருவர் குறித்தும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பொலிஸார் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 31 அக்டோபர், 2009

தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து மீண்டும் விசாரணை


விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக கொழும்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

.அரசாங்கத்திற்கு எதிரான வகையில் குறித்த இருவரும் செயற்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது