வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஆகஸ்ட், 2012

இலங்கை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு இடையில் சிறந்த உறவுகளை பேண ஜப்பான் உதவும்: யசூசி அகாஷி



இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு இடையில் சிறந்த உறவுகளை பேண ஜப்பான் தொடர்ந்து உதவும் என இலங்கைக்கான ஜப்பான் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்து இப்போது கருத்து கூறுவது முறையல்ல: ஜப்பான்



டக்கில் உள்ள பாதுகாப்பு படைகளின் தொகை குறைந்து வருவதாகவும் அது ஒரு தொடர் செயன்முறையாக காணப்படுவதாகவும் இதனால் வடக்கிலுள்ள இராணுவத்தின் இருப்பு பற்றி இப்போது கருத்துக் கூறுவது பொருத்தமற்றது எனவும் ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது.

வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்து இப்போது கருத்து கூறுவது முறையல்ல: ஜப்பான்



டக்கில் உள்ள பாதுகாப்பு படைகளின் தொகை குறைந்து வருவதாகவும் அது ஒரு தொடர் செயன்முறையாக காணப்படுவதாகவும் இதனால் வடக்கிலுள்ள இராணுவத்தின் இருப்பு பற்றி இப்போது கருத்துக் கூறுவது பொருத்தமற்றது எனவும் ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது.

திங்கள், 14 மார்ச், 2011

ஜப்பான் அணுமின் நிலையத்தில் இரண்டாவது தடவையாகவும் வெடிப்பு

பூமியதிர்வால் தாக்கப்பட்ட புக்குசிமாவின் இலக்கம் - 1 அணு மின் நிலையத்தின் மூன்றாவது உலையில் ஜதரசன் வெடிப்பு இன்று காலை ஏற்பட்டதாக ஜப்பானிய அரசாங்க அணு பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஐ.நா. வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்

அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 15 ஜூன், 2010

7 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்பியது ஜப்பான் விண்கலம்!

பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் நேற்று முன் தினம் பூமிக்கு திரும்பியுள்ளது.

சனி, 8 மே, 2010

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் வர்த்தக சமூகம் ஒத்துழைப்பு வழங்கும்


பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசாங்கமும் ஜப்பான் வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிப்பொன் மன்றத் தலைவர் யொஹெய் சசகாவ தெரிவித்துள்ளார்.

புதன், 16 டிசம்பர், 2009

டாலரில் குளிக்கும் ஜப்பானியர்கள்!


ஜப்பானைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனம் பண்டாய். சமீபத்தில் இந்நிறுவனம் அமெரிக்க டாலர் கரன்சி வடிவில் குளியல் சோப் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ‘பப்ளி பப்பிள் பாத்’ என்ற இந்த காகித வடிவ சோப், தண்ணீரில் போட்டதும் கரைந்து நுரையாகி விடும். உண்மையான கரன்சி போல் இல்லாமல் இருக்க, அமெரிக்க அதிபர் பெஞ்சமின் பிராங்க்ளின் சிரிப்பதுப் போல் அச்சிடப்பட்ட இந்த சோப்பு, 100 டாலர் மதிப்புள்ள நோட்டு அளவில் 1000 டாலர் என அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது. அமெரிக்க டாலர் சோப்பை நன்றாகக் கரைக்கின்றனர் ஜப்பானியர்கள்ஜப்பானியர் எவ்வளவோ பரவாயில்லை. டாலர் வடிவில் சோப்பைத்தான் தயாரித்துள்ளனர். ஜிம்பாவ்வே நாட்டில், ‘டாய்லட் பேப்பராக காலாவதியான ரூபாய் நோட்டுகளை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்’ என்று அந்நாட்டு அரசே மக்களை கேட்டுக்கொள்ளும் நிலை நிலவுகிறது.
ஜெர்மனி நாட்டில் ஒருகட்டத்தில் ரூபாய் நோட்டிற்கு மதிப்பே இல்லாமல் போனபோது மக்கள் அவற்றை மொத்தமாக எரித்த கதையெல்லாம் நடந்தது.

செவ்வாய், 17 நவம்பர், 2009

பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் ஏயார் லைன்ஸ் அறிவிப்பு

பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனம் மீண்டும் நிமிர கால அவகாசம் தேவை என்று ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏயார் லைன்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஜப்பானில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது .

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் (1.45 பில்லியன் டொலர்) அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது ஜப்பான் ஏயார்லைன்ஸ். கடந்த ஆண்டு இந்த நஷ்டத்தின் அளவு 36.7 பில்லியன் யென்களாக இருந்தது.

இந்த ஆண்டு வருமானமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. பயணிகள் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சி காணப்படுவதால் வருவாய் சீரடையும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை என ஜப்பான் ஏயார் லைன்ஸின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இந்த வீழ்ச்சியைச் சரிகட்ட பல்லாயிரம் பணியாளர் குறைப்பு, சிக்கன நடவடிக்கை என பல முயற்சிகள் செய்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

எனவே நிறுவனம் பேரிழப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதோடு, கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கால அவகாசமும் கேட்டுள்ளது ஜப்பான் ஏயார் லைன்ஸ்.

இப்போதைக்கு சரிவிலிருந்து நிமிர உடனடியாக 125 பில்லியன் யென் தேவை என்றும், இதனை ஜப்பானிய அரசு கொடுத்து உதவ வேண்டும் என்றும் இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது