வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியாவே யோசனை வழங்கியது


லங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணையை கொண்டு வருவதற்கான யோசனையை அமெரிக்காவிற்கு இந்தியாவே வழங்கியது என்று இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

திங்கள், 5 மார்ச், 2012

இந்தியாவின் ஆதரவு பறிபோகும் சாத்தியம் _


ல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இழக்கும் நிலைமை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துவது எவ்வாறு ஏகாதிபத்தியவாதமாகுமென்றும் கேள்வியெழுப்பினார்.

வியாழன், 9 டிசம்பர், 2010

தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் ஜயலத்தையும் கைது செய்யுங்கள்: விக்கிரமபாகு

நாட்டுக்கு எதிராக தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனாவையும் கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றேன் என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமாபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

எல்.ரி.ரி.ஈ ஆர்ப்பாட்டத்தில் விக்கிரமபாகு பங்குபற்றவில்லை - நவ சமசமாஜ கட்சி

ண்டனில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன பங்குபற்றினார் என்று சில அமைச்சர்கள் கூறியதை நவ சமசமாஜ கட்சி இன்று உறுதியாக மறுத்துள்ளது.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

12,000 அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? : விக்கிரமபாகு கேள்வி


நாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது.

நாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா?" என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிடுகையில்,

"பெருந்தொகையான அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய அடையாளங்களைக் காப்பதற்காக, தங்களுடைய உரிமைகளைப் பேணுவதற்காக குரல்கொடுத்தோரை எவ்வாறு கைது செய்ய முடியும்?

தமது மக்களுக்கு உணவில்லை, துயரத்துடன் இருக்கிறார்கள் என எழுதிய திஸ்ஸநாயகம் சிறை வைக்கப்பட்டார். என்னை விட குறைவான வார்த்தைகளே அவர் பேசினார். அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்