வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

புலிக்கொடி விவகாரம்: 'விசாரிக்கப்படும்' என ஒரே வார்த்தையில் பதிலளித்த அமைச்சர்



மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நெல்லியடி பஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

திம்புவில் எல்.ரி.ரி.ஈ. கையாண்டதைப் போன்ற உபாயத்தை த.தே.கூ. கையாள்கிறது: அரசு


பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோரி காலத்தை விரயமாக்கக்கூடாது எனவும் உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

வியாழன், 28 ஜூலை, 2011

அவசரகால விதிகள் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் : அரசாங்கம்

வசரகாலச்சட்டம் படிப்படியாக நீக்கப்படும் எனவும் இவ்வருட இறுதிக்குள் இவ்விதிகள் முற்றாக நீக்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கூறினார்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

'இலங்கை மீது தடைவிதித்தால், அமெரிக்க ஜனநாயக கொள்கைக்கு அது முரணானது'

லங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது.

புதன், 1 ஜூன், 2011

கட்டுநாயக்க மோதல் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம் _

ட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய மோதல்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஆணைக் குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வியாழன், 29 ஜூலை, 2010

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புதன், 16 ஜூன், 2010

தமிழக எம்.பிக்கள் விரைவில் இலங்கை வருவர் : அமைச்சர் கெஹெலிய

வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழக எம்.பிக்கள் இலங்கை வரவுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

செவ்வாய், 18 மே, 2010

எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை - ஊடகத்துறை அமைச்சர்

எவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

புதன், 10 பிப்ரவரி, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றாலும் 6 மாத காலம் இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்


இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவராவார்.

ஓய்வு பெற்று ஆறு மாத காலத்துக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைக்குட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரம் உள்ளது.

எனவே இதன் அடிப்படையில் அவர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை சந்திப்பதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு அவரது சட்டத்தரணிகளுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கியுள்ளது. அத்துடன் அவருடைய கோரிக்கைகளுக்கிணங்க முழுமையான மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, விமானப் படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பேச்சாளர் கப்டன் அதுல செனரத், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரஷாந்த ஜயக்கொடி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அங்கு ஊடகவியலாளர் மத்தியில் தகவல் வழங்குகையிலேயே அமைச்சர் கெஹெலிய மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது

ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இராணுவ பொலிஸாரால் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக்காவலில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இராணுவ குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு உத்தியோகத்தரோ அல்லது இராணுவ வீரரோ இராணுவ சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அத்துடன் அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருப்பாராயின் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்துக்குள் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கமைய இராணுவத்தின் 57ஆவது சட்டத்தின் பிரகாரம் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட முடியும்.

அந்தவகையில் இராணுவ சட்டதிட்டங்கள் மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை, பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருக்கும்போது அரசியல் தொடர்புகள் பேணப்பட்டமை, இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக செயற்பட்டமை மற்றும் இராணுவத்துக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி என்ற ரீதியில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு பூரண பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரினூடாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

இராணுவ நீதிமன்றத்திலேயே அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெனரல் பொன்சேகா சார்பில் அவர் விரும்பிய சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியும். அதற்கான அனுமதி இராணுவ சட்டத்தில் உண்டு.

அவரைப் பார்வையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க முடியும். அத்துடன் அவருக்கு மருத்துவ வசதிகள் தேவைப்படின் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட நாட்களாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையினையும் முன்னெடுக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் மிகவும் கவனமாகவே விசாரணை நடத்தப்பட்டு தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதானது முற்றும் முழுதான சட்ட நடவடிக்கையாகும். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதே தவிர எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. பொய்ப் பிரசாரங்கள் உண்மையாகிவிட முடியாது.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகள் முடிவடைந்ததும் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

வியாழன், 3 டிசம்பர், 2009

புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க ஏற்பாடு-கெஹெலிய ரம்புக்வெல்ல!


இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசுட மையாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். புலிகளிடம் 14 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பெயரில் மாத்திரம் ஐந்து கப்பல்களும் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கே.பியின் பெயரிலுள்ள ஐந்து கப் பல்களில் மூன்று கப்பல்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த சொத்துக்களை சுவீகரிப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரை யாற்றுகையில், இலங்கையிலும், வெளி நாடுகளிலும் உள்ள குழுக்களிடமும் தனி நபர்களிடமும் தற்போது இருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசாங்க புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்பொழுது தனி நபர்களினதும், குழுக்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள சொத்துக்களை அரசு சுவீகரிக்கவுள்ளது.

கே.பி.யின் பெயரில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

புலிகளின் நிதி மார்க்கங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப் பதற்காகவே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார். கே.பி.யின் வங்கிக் கணக்குகளின் மொத்த பெறுமதி தொடர்பாக இன்னும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கெப்டன் அதுல செனரத், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்களான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.