வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 மே, 2012

குற்றச்செயல்கள் குறித்து பரஸ்பர ஒத்துழைப்பு: இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் ஒப்பந்தம்



குற்றச்செயல்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான புரிந்துணர்வு எனும் அடிப்படையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இரு ஒப்பந்தங்கள் இன்று
கைச்சாத்திடப்பட்டன.தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில், அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தாய்லாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சுரபொன் டுவின்சக்கொய்குள் ஆகியோரே இவ்விரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’