வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மே, 2012

யாழில் த தே கூ-ஐ தே க இணைந்து மேதின ஊர்வலம்


லங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான மே தின ஊர்வலம் நடைபெற்றது .நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியிலிருந்து இந்த ஊர்வலம் ஆரம்பமாகியது.
இந்த ஊர்வலத்தில் பிராதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தர், மற்றும் பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் தென் பகுதியிருந்து பெரும் தொகையான எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்துகு வந்திருந்தனர் என அங்கு சென்றிருக்கும் தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார். ஆட்சி மாற்றம் வேண்டும், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், ஊழல் நிறைந்த ஆட்சி வேண்டாம் உட்பட பல கோஷங்களை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் எழுப்பினர். ஊர்வலத்தில் பெருமளவில் பெண்களும் கலந்து கொண்டதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போலே ஈபிடிபி கட்சியின் ஊர்வலமும் மூன்று இடங்களில் இருந்து தொடங்கியது. இதில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாலையில், தனித்தனியாக பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’