வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஏப்ரல், 2012

எதிர்க்கட்சித் தலைவருடனான நல்லெண்ண சந்திப்பு!



யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையிலான நல்லெண்ண சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டுமென தான் கேட்டுக் கொண்டதாக ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்ததாகவும் அதனை தாம் வரவேற்பதாகவும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) உள்ளிட்டோருடன் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க ரவிகருணாநாயக்க ஆகியோரும் உடனிருந்தனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’