வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மே, 2012

இத்தாலிய பூமியதிர்வினால் 25 இலங்கையர்கள் இடம்பெயர்வு



த்தாலியில் இடம்பெற்ற பூமியதிர்வினால் சுமார் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இதனால் இடம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கப்பட்டுள்ளதை இத்தாலியிலுள்ள இலங்கை தூதுவராலயம் உறுதிப்படுத்தியதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேவையான உதவிகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள இலங்கை சமூகத்தினர் மற்றும் இத்தாலியின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இலங்கை தூதுவராலயம தொடர்ந்து தொடர்புகளை பேணி வருகின்றது என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்தது. http://www.mea.gov.lk/images/stories/pdf/rome-list%20affected%20-24%20may12.pdf என்ற இணையத்தளத்தின் ஊடாக இத்தாலியில் இடம்பெற்ற பூமியதிர்வினால் இடம்பெயர்ந்துள்ள இலங்கையர்களின் பெயர்களை பார்வையிட முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’