வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஜனவரி, 2012

மின்சார விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!


யாழ்ப்பாணத்திற்கான மின் விநியோகத்தின் சீரமைப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் வடமாகாண ஆளுநர் அவர்களது செயலகத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்திற்கான மின் விநியோகம் இலங்கை மின்சார சபை மற்றும் நோதர்சன் பவர் எக்றிகோ ஆகிய தனியார் நிறுவனங்கள் என்பன மூலம் தனித் தனியாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. அதேபோன்று மண்டைதீவுக்கான மின் விநியோகத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொதுமுகாமையாளர் பிரியந்த குணதிலக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’