வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 டிசம்பர், 2011

புதுக்குடியிருப்பு எல்.ரீ.ரீ.ஈ. பங்கர்களில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்களை வவுனியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆட்லறி குண்டுகள், கிளைமோர் குண்டுகள், புலிகளின் 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள், ரீ – 81 ரக மோட்டார் பியூஸ்கள் 116, கைக்குண்டுகள் 47, புலிகள் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதியவகை வெடிகுண்டுகள் 09, ஆர்.பீ.ஜீ. ரக குண்டுகள் மற்றும் 20 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் போன்றன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் ரோந்துப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’