வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 மே, 2011

பாதுகாப்புக்கு தேவையான அளவிலேயே படை முகாம்கள் அமைப்பு: உபய மெதவல

நா ட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேவை அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உள்ளது. அந்தவகையில் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையானளவிலேயே படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

தவிர, அதிகளவிலான படை முகாம்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன என்னும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் படை முகாம்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’