வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 மே, 2011

வவுனியாவில் யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது

வுனியா - மன்னார் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல், 18 வயது யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் வவுனியா, நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.
முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாத்காரமான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்த யுவதி குறித்த வீதியில் அமைந்துள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’