வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஆகஸ்ட், 2010

புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை இராணுவம் மீள ஒப்படைக்கவில்லை எனப் புகார்

டக்கில் புலிகளால் தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை இராணும் மீள ஒப்படைக்கவில்லை என அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன
.எவ்வாறாயினும், இந்த காணி உரிமையாளர்கள் விடுதலை புலிகளுக்கு காணிகளை விற்றுப் பெற்ற பணத்தை கொண்டு தமது பிள்ளைகளை வெளிநாட்டுகளுக்கு அனுப்புவதற்கு பயன்படுத்தியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலங்களில் சில விடுதலை புலிகளின் நிர்வாக அலுவலகம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையகமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காணிகள் தொடர்பாக கிளிநொச்சி அரச அதிபர் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் அடுத்த வாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’