வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

தமிழீழ விடுதலைப்புலிகளின் கே.பி.யை அரச சாட்சியாளராக அங்கீகரிக்க சட்டத்தில் இடமுண்டு : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை மாநாட்டில் வைத்து, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒருவர் தற்போதைய நாட்டின் பிரச்சினை மற்றும் சர்வதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு பயனுள்ள விடயங்களில் உதவுவாராக இருந்தால், அரசாங்கம் என்ற வகையில் முடியுமான விடயங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேளையில், உலக நாடுகளுடன் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’