வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 மே, 2010

சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்!

யுத்தத்தால் சிதைவடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பூசை வழிபாடுகளை மேற்கொள்ளும் விதத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யுத்தத்தால் சிதைவடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பூசை வழிபாடுகளை மேற்கொள்ளும் விதத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இருபாலை வேளாதோப்பு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான சித்திரத் தேர் வெள்ளோட்ட விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தினால் சைவ ஆலயங்களும் பாதிக்கப்பட்டு சிதைவடைந்து அழிவடைந்து உள்ளன. இந்நிலையில் அந்த ஆலயங்களைப் புனரமைக்கவும் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளவும் கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த அமைச்சுக்களின் ஊடாக நிதியுதவிகளைச் செய்துள்ளோம்.
அதேபோன்று எதிர்காலத்திலும் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ள ஆலயங்களை புனரமைக்கவும் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளவும் உரிய ஏற்பாடுகளையும் செய்யவுள்ளோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இதேவேளை சித்திரத்தேர் உருவாக்கிய ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஷ_க்கு அமைச்சர் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் இவ்வாறான பாரம்பரிய கைத்தொழில்கள் மூலம் சைவமும் தமிழும் செழித்தோங்கும் விதத்தில் கலை கலாசாரத்தைப் பேணி பாதுகாத்து வளர்க்க தமது அமைச்சு தொடர்ந்தும் பாடுபடுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளோட்ட விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஏனைய சிறப்பு விருந்தினர்களும் மங்கல வாத்திய சகிதம் கோயில் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கோயிலில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மண்டபத்தில் பிரதீபன் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஆசியுரைகளை நல்லை அதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆலய பிரதம குரு சௌபாக்கிய குமாரக் குருக்கள் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா ஆகியோரும் சிறப்பு விருந்தினர் உரையை யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து சித்திரத் தேரை வடிவமைத்து உருவாக்கிய ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஷ் ஆச்சாரியாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கியதுடன் பொற்பதக்கம் அணிவித்தும் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’