வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

குடியுரிமை கோரும் தமிழ் அகதிகள்


 

இந்தோனேசியக் கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த படகு (ஆவணம்)
இந்தோனேசியக் கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த படகு (ஆவணம்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற வழியில் மலேஷிய கடலில் தத்தளித்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 தமிழர்கள், தமக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டால் தாம் தமிழ்நாட்டுக்கு வரத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அகதிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு இந்திய அரசு மூலம் முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கோரிவருகின்றன.
இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.

மலேஷியாவில் தவிக்கும் இலங்கை தமிழ் அகதிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்ற தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட அகதிகள், தமக்கு இந்தியா குடியுரிமை வழங்கினால் மட்டுமே அங்கு செல்ல சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’