வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

வவுனியாவில் நேற்று 2700 பேர் மீளக் குடியமர்வு : அரச அதிபர்


வவுனியாவிலிருந்து 758 குடும்பங்களைச் சேர்ந்த 2700 பேர் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டனர்.
வவுனியா வடக்கிலும் முல்லைத்தீவு முள்ளியாவளை பிரதேசத்திலும் மீளக்குடியமர்த்தப் படவென இவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தங்கி இருந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வவுனியா நகர சபை மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு பஸ்களில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணம் செய்யவென 45 பஸ்களும் இவர்களது பொருட்களை எடுத்துச் செல்லவென 30 லொறிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’