வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

மே 17ஐ துக்க நாளாக அனுஷ்டிக்க கோருகின்றது தமிழ்க் கூட்டமைப்பு

ஒவ்வொரு வருடமும் மே 17 ஆம் திகதியை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா, ந.சிவசக்தி ஆனந்தன், பா. அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி.யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே.பிய சேன ஆகிய கூட்டமைப்பின் 14 நாடாளு மன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டிருப்பவை வருமாறு
வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்க தினமாகக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக் கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட் சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப் புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப் பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளாலும் போரினாலும் பெரும்தொகையானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வேறு பல பாரிய பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
பெருந்திரளானோர் வீடுகளிலும் இருப்பிடங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
2006 நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம், காலப்போக்கில் விரிவடைந்து வன்னிப் பெருநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று இறுதிக் கட்டமாக கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் தொடக்கம் மே 18 ஆம் திகதிவரை உக்கிரமாக நடந்தது.
இந்த உச்சக்கட்டப் போரின்போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் இலட்சக் கணக்கானவர்கள் வேறு பல பாரிய பாதிப்புகளுடன் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தப் பேரவலம் உலக சரித்திரத்தில் நடந்த பாரிய இப்பேரவலத்தை நினைவு கூரும் வகையில் வருடா வருடம் துக்கதினமொன்றைக் கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் வேண்டுகின்றோம்.
இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம் என்றுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’