வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

விறகின் மீது படுத்து தீ மூட்டி உயிர் நீத்த வயோதிபர்! ஏழாலையில் சனியிரவு அதிர்ச்சியூட்டும் சம்பவம்


ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்வாரா? என ஆச்சரியத்தை யும் உணர்வையும் தரும் விதத்தில் முதி யவர் ஒருவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விறகு அடுக்கின்மேல் படுத்துத் தனக்குத் தானே தீ மூட்டித் மரணித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழாலையில் நிகழ்ந்ததாகத் தெரியவரு கிறது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
ஏழலை சைவ சன்மார்க்க வித்தியாசா லைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒன் றில் வசித்து வந்த முதியவரான உமாபதி (வயது68) என்பவரே இவ்வாறு தனத்குத்தானே தீ மூட்டி மரணித்துள்ளார்.
வீட்டாருக்கு நித்திரைகொள்ளச் செல்வதாகக் கூறிய முதியவர் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் அங்கு அடுக்கி வைத்திருந்த விறகின் மீது படுத்துத் தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார் என்று சொல்லப்படுகின்றது.
வீட்டில் உள்ளவர்கள் காலையில் இவரைக் காணவில்லையே எனத் தேடியபோதே விறகு அடுக்கப்பட்டிருந்த இடத்தில் எரிந்த நிலையில் அவரின் சடலம் காணப்பட்டதாகவும் வீட்டார் சுன்னாகம் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து,மல்லாகம் நீதிவானின் பணிப்புக்கு அமைய முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’