வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 15 மே, 2010

ஜீ-15 மாநாடு : ஜனாதிபதி நேற்றிரவு ஈரான் பயணம்


ஜீ -15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்றிரவு ஈரான் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஜீ 15 மாநாடு, ஜனாதிபதியிடம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று ஜனாதிபதி ஈரான் செல்ல உள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதேவேளை, நேற்றைய தினம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஈரான் சென்றுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று ஜீ 15 மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான அமர்வு இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’