வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஏப்ரல், 2010

முதல்வர் விழாவில் வன்முறை


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட விழாவில் அவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய சில வழக்கறிஞர்கள் விழா நடந்துகொண்டிருக்கும்போதே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சம்பவத்தின்போது அங்கிருந்த இரு தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் மூவரும் காயமடைந்திருக்கின்றனர். அவர்களது காமிராக்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
சிலை திறப்பிற்குப் பிறகு கருணாநிதி பேசத் துவங்கியபோது, மக்கள் கலை இலக்கியக் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த ஒரு சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடிகளை வீசிய வண்ணம், "வழக்கறிஞர்களுக்கு நியாயம் வழங்காத கருணாநிதி பேசக்கூடாது" என முழக்கங்கள் எழுப்பினர்.
சென்ற வருடம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போலீசார் இடையே மோதல்கள் நடந்திருந்தன
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கு இடையே நடந்த மோதல்கள் தொடர்பாக போலீசார் எவர் மீதும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவ்வாறு தெரிவித்தனர்.
உடனே பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் வெகுண்டெழுந்து, வழக்கறிஞர்கள் மீது நாற்காலிகளை வீசத்தொடங்கினர். இன்னும் சிலர் நேரடியாக அவர்களை நெருங்கி தாக்கத் தொடங்கினர்.
சம்பவங்களை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி சானல் நிருபர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.
சற்று நேரம் மோதல் நடந்த பிறகு, போலீசார் தலையிட்டு அடிபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டி முழக்கங்கள் எழுப்பியவர்களில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் வழக்கறிஞர்களும் தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்தவர்களும் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’