-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
1990 முதல் 2009 வரை புலிகள் (அட்டைகளின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -14)
புலிகள் பிடித்துவைத்திருந்த தமிழ் இளைஞர்களில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களை கொலை செய்தார்கள். பிடித்து வராமல் அந்த அந்த ஊர்களில் வைத்தே மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைக் கொன்றார்கள். மேலும் இயக்க ஆதரவாளர்கள், ஐ.பி.கே.எப். இருந்த போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று பொதுமக்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வரை கொலை செய்தார்கள். ஐ.பி.கே.எப். வெளியேறிய 1990ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக ஒன்பததினாயிரம் பேர் வரை புலி விலங்குகளால் கொல்லப்பட்டார்கள். தமிழர்களைக் கொலை செய்வது புலிகளுக்கு பிறப்புரிமையாக்கப்பட்டது. 2009;ல் தமிழர்களை கூண்டோடு அழிப்பது சிங்கள இனத்துக்குப் பிறப்புரிமையாக்கப்பட்டது.
எனது ஊரில் நடந்த ஓர் நிகழ்வைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். 1982ஆம் ஆண்டு நடந்தது. எனது ஊரில் ஆசீர்வாமும் அந்தோனிப்பிள்ளையும் உறவினர்கள். ஓத்த வயதுடைய இவர்களது குழந்தைகள் ஆறாவது ஏழாவது வகுப்புகளில் படித்து வந்தனர். இந்த இரு மாணவர்களுக்கிடையில் ஒரு நாள் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வீடு வந்து சேர்ந்தது. ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொண்டனர். இரண்டு பேருக்குமே முகங்களில் காயம். இரண்டு பேருமே சவால் விட்டுக்கொண்டனர். உன்னை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன். இதுதான் இருவரது சவாலும்! ஆசீர்வாதம் தனது தரப்பில் பத்துப் பேரைத் திரட்டினார். இதைக் கேள்விப்பட்ட அந்தோனிப்பிள்ளை பதிலாக அவரும் பத்துப்பேரைத் திரட்டினார். அவரும் விருந்து வைத்தார். இவரும் விருந்து வைத்தார் அடியாட்களுக்கு. இரண்டு நாட்கள் விருந்துக்குப் பின்னர் ஞாயிறு மாலை அந்தோனிப்பிள்ளையின் வீடு நோட்டமிடப்பட்டது. அந்தோனிப்பிள்ளை அலேர்ட் ஆனார். அவரது அடியாட்களும் வந்து சேர்ந்தனர். தடிகள் கத்திகளுடன் மோதிக்கொண்டனர். யாரும் இறந்துவிட வில்லை. ஆனால் பயங்கரக் காயம்.
இரண்டு பகுதியினரும் ஆளுக்கொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆசீர்வாதத்தின் மனைவியிடமிருந்த தாலிக்கொடி காப்புச் சங்சகிலி எல்லாம் அடவு கடைக்கும், விற்பனைக்கும் சென்றன. அதேபோல் அந்தோனிப்பிள்ளையின் நகைகளும் விற்பனைக்குச் சென்றன. இது மானப்பிரச்சினை, கழட்டடி தாலியை என்றுதான் நகைகள் கழற்றப்பட்டன. முதலில் பத்துப் பத்துப் பேருடன் ஆரம்பமான இந்தப் பகை இப்போது ஒவ்வொருப் பகுதியிலும்; ஐம்பது பேராகிவிட்டது. மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.
ஒருபக்கம் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க வேண்டும், சட்டத்தரனிகளுடன் தற்காப்பு நடவடிக்கைகளையும் வழக்கில் உள்ள ஓட்டை உடசல்களையும் கண்டறிந்து வழக்கில் வெற்றி பெற வேண்டும். இதே திட்டத்தில்தான் அந்தோனிப்பிள்ளையும் செயற்பட்டு வருகிறார். ஒரு கிழமை போனது, மருத்துவமனையிலிருந்து அனைவரும் வீடு திரும்பினர். இந்த இரண்டு பகுதியினரையும் தூண்டி விடுவதற்கென்று பலபேர் இரவு பகலாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். உடனுக்குடன் இருபகுதியினரது திட்டங்களும் இருவரையும் சென்றடையும், ஊர் வாசகசாலையில் இதற்கென்றே ஆட்கள் கூடுவர். சண்டையில் யாரது பக்கம் நியாயம் இருக்கிறது என்பதுபற்றி விலாவாரியாகக் கதைப்பார்கள். பொதுவான விவாதம் ஒருபக்கம் இருக்க, ஆசீர்வாதத்தை தூண்டி விடுவதற்கும் அவர்கள்தான் நியாயம் அதிகமாக இருககிறது என்று கூறி அவரை உசுப்பேற்றி விடுவதற்கும் ஊரில் வெட்டிப்பேச்சு வல்லவர்கள் இருந்தனர்,
இறுதியில் ஊர் இரண்டு பட்டது. அடுத்த மோதலுக்குத் தயாரானார்கள் இருபகுதியினரும். இந்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த பாதிரியார் ஊர் திரும்பினார். ஆலயத்தில் இருந்தவர்களிடத்து விபரங்கள் கேட்டறிந்தார். ஊருக்குள் சென்று ஏனையோரை விசாரித்தார். இறுதியாக இரு பகுதியினரையும் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தார். இருவரும் தங்கள் குழுவினருடன் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர். குழுவினரை வெளியே இருக்கச் சொன்ன பாதர், ஆசீர்வாதத்தையும், அந்தோனிப்பிள்ளையையும் தனியாக உள்ளே அழைத்தார்.
அவர் முன் இருந்த நாற்காலியில் இருவரையும் அமரும்படி கூறினார். பாதரின் ஆணையில் உபதேசியார் மட்டும் நின்று கொண்டிருந்தார். பாதர் சொன்னார். ஒரு வீரன் எப்போதும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்வான். கோழை ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். தண்டனை கிடைத்துவிடுமோ மரியாதை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் கோழை பொய்சொல்ல ஆரம்பிப்பான். உங்கள் இருவரிடத்திலும் வீரம் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனவே நாங்கள் மூவரும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறி உபதேசியாரிடம் ஐந்து நிமிடத்தில் எங்களுக்கு நினைவூட்டவும் என்று சொல்லி பாதர் மௌனமானார். ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் அவர் போன்றே மௌனமானார்கள்.
ஐந்து நிமிடங்களில் உபதேசியார் நினைவூட்டினார், பாதர் ஆசீர்வாதத்தைப்பார்த்து, நீங்கள் சொல்லுங்கள், யார் மீது தப்பு? ஆசீர்வாதம் சொன்னார், பாதர் என்மீதுதான் தப்பு! என்னை மன்னித்துவிடுங்கள்! அந்தோனிப்பிள்ளையைப் பார்த்து அந்தோனிப்பிள்ளை சொல்லுங்கள் யார் மீது தப்பு? பாதர் என்மீதுதான் தப்பு என்றார் அந்தோனிப்பிள்ளை, பாதர் சொன்னார், நீங்கள் இருவருமே வீரர்கள், உங்கள் ஊரில் நான் பங்குத்தந்தையாக இருக்கப் பெருமைப்படுகிறேன்.
நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் சிலருக்கு சில நன்மைகள் கிட்டலாம். ஆனால் இழப்பு எங்கள் சமூகத்துக்குத்தான். சிறுபிள்ளைகளது பிரச்சனைகளை அவர்களுடனேயே தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் பெரியவர்கள் மோதல் போடுவது மிருக சிந்தனைக்கு ஒப்பானது. பகுத்து அறிந்துகொள்ள அறிவு இருக்கும் போது ஆயுதங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. இங்கு எதைப்பற்றியும் நாங்கள் ஆராய வேண்டியதில்லை. நடந்தவையை மறந்து நீங்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்ளுங்கள். இருவரும் சமாதானம் சொல்லிக்கொண்டனர். இருவரும் கைகோர்த்தபடி பாதரின் பின்னால் சென்றனர். வெளியே நின்ற குழுவினரிடத்து பாதர் சொன்னார்,
அன்பார்ந்த சகோதரர்களே! ஆசீர்வாதம் அவர்களுக்கும் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கும் இருந்து வந்த பகை உணர்வு மறைந்துவிட்டது. அவர்கள் ஒற்றுமையாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்களிடையில் இனிமேல் சண்டை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் கடமையாகும். இவ்வளவு பெரிதாகிவிட்ட சண்டையை ஒரு நொடிப்பொழுதில் மறப்பதற்கு முன் வந்த ஆசீர்வாதத்தையும் அந்தோனிப்பிள்ளையையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்! எங்கள் ஊரில் இனிமேல் சண்டைகள் வரக்கூடாது. அப்படி வந்தால் அதனை முளையிலேயே நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நல்லதோர் நிகழ்வை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இன்று இரவு நானே உங்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கிறேன். அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார். ஆசீர்வாதம் உடனே பாதர், இந்த விருந்துக்கு நான் ஆடு ஒன்று தருகிறேன், பதிலுக்கு பாதர் நானும் ஓர் ஆடு தருகிறேன் என்று கூறி இருவரும் ஆடுகளைக் கொடுத்து அன்று இரவு விருந்து சிறப்பாக நடந்து ஊர் பெரும் அமைதி திரும்பியது.
இரண்டு மாணவர்களது சண்டை எங்கள் ஊரை இரண்டு பட வைத்தது. இரண்டு பிரிவாக ஊர் திரண்டு மோதுவதற்கு இருந்த தருணத்தில் பங்குத் தந்தை வந்தார். எங்கள் இனத்தைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்த்தால், இச்சம்பவம் எங்கள் இயக்கங்களுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்! இயக்கங்கள் மோதும் போது அதனைத் தடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. எங்கள் இளைஞர்களும் ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பங்குத் தந்தைக்கு மரியாதை கொடுத்தது போன்று யாருக்கும் மரியாதை கொடுத்ததில்லை. எங்கள் பங்குத் தந்தையால் ஊர் இரண்டுபட்டு நடக்க இருந்த மோதல் தவிர்க்கப்பட்டது. சமாதானம் ஏற்பட்டது.
இந்தப் பங்குத் தந்தைப் போன்று எங்கள் தமிழ் இனத்துக்கு ஓர் தலைமை இருந்திருந்தால் இயக்கங்களை அழைத்து அமரவைத்து வீரர் என்றால் தவறை ஒத்துக்கொள்வர் என்று விளக்கம் கூறியிருந்தால் இந்த இயக்க அழிப்பு நடவடிக்கையே நின்று போயிருக்கும். 1986ல் எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள். எங்கள் இனத்துக்கு என்று ஓர் தலைமை நிரந்தரமாக வேண்டும். அதை ஏற்படுத்த வேண்டியது இன்று எஞ்சியிருக்கும் தமிழ் மக்களது கடமையாகும். முன்பு புலிகள் எங்கள் இனத்தை வேட்டையாடியது போன்று இனி வருங்காலங்களில் சிங்கள இனத்தவர் எங்கள் இனத்தை வேட்டையாடாமல் இருக்க தகுதியுடையவர்களை இணைத்து தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்.
(தொடரும்…) நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 15)
(கிறேசியன், நாவாந்துறை)
துணுக்காயில் புலி விலங்குகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது. தோழர் முகுந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) வைக்கப்பட்டிருந்த குழிக்குள் புலி விலங்கு ஒன்று ஓர் பாம்பை உள்ளே போட்டது. ஆனால் முகுந்தன் அதைக் கண்டு பயந்து அலறியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எந்த வகைப்பாம்பைப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. இரண்டு நாட்கள் கழித்து இன்னுமோர் பாம்பைக் கொண்டு வந்து புளொட் அங்கத்தினர்கள் இருந்த குழிக்குள் போட்டனர். அந்தக் குழியிலிருந்து சிறிதளவு சலசலப்புக் கேட்டது. அந்தக் குழியில் மொத்தம் பத்துப் பேர் வரையில் இருந்தனர். பாம்பைக் குழியில் போட்டு அவர்கள் படும் அவஸ்தையைக் கண்டு புலிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாம்பு போடப்பட்ட மறுநாள் காலையில் முகுந்தன் அவர்கள் காலைக் கடனுக்காக ஏணிவழியாக வெளியே வந்தார். நான் அவரது முகத்தை உற்றுக் கவனித்தேன். அவரது முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அவர் வெளியே வரும்போது போடப்பட்ட பாம்பு உள்ளேதான் இருந்தது. இந்தப் புலி விலங்குகளை விட பாம்பு ஒன்றும் கொடிய விலங்கு இல்லை என்று அவர் மனதுக்குள் நினைத்திருந்தார் போலும். இவர்களிடம் பட்டு வரும் சித்திரவதையை விட பாம்பு கடித்து இறப்பது சுலபமான இறப்பாக இருக்கும் என்றும் அவர் தனக்குள் நினைத்திருப்பார் போலும். ஏனெனில் அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை! அங்கு இருந்த மூவாயிரம் பேரில் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் இவராகத்தான் இருப்பார்.
நல்லவேளையாக இந்தப் பாம்பு விளையாட்டை நாங்கள் இருந்த பகுதியில் இருந்தவர்கள் விளையாடவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு இந்தப் பாம்பு வைத்தியம் கொடுத்துதான் பணம் பறித்தனர் இந்தப் புலிவிலங்குகள்.
கனடாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது நெருங்கிய உறவினரது திருமணத்திற்காக மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்தார். இவர் புலிகள் இயக்கத்துக்கு பணம் உட்பட பல வழிகளில் உதவிகள் புரிந்தவர். அமைதி நாட்களில் ஆசை பிறந்தது யாழ்ப்பாணத்தைப் பார்க்க. இவர் ஓர் வியாபாரி!
புலிகள் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடம் பணம் பறிப்பது வழக்கம். இதனை முன்னரே தெரிந்துகொண்ட வல்வெட்டித்துறை நபர் தனது குழந்தைகளிடம் திட்டவட்டமான ஓர் உத்தரவினைப் போட்டுவிட்டுத்தான் இலங்கை வந்தார். “புலிகள் எங்களைப் பிடித்துவைத்துக் கொண்டு பணம் கேட்டாலும் நீங்கள் ஒரு டொலர்கூட அவர்களுக்குக் கொடுத்துவிடக் கூடாது. நானும் அம்மாவும் எப்படியும் கதைத்து அவர்களிடமிருந்து தப்பிவந்து விடுவோம்! என்று கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் தனது குழந்தைகளிடத்துக் கூறிவிட்டு புறப்பட்டனர் இலங்கைக்கு!
வன்னியைக் கடந்து வல்வெட்டித்துறை சென்று திருமணத்திலும் கலந்து கொண்டார். திருமண வீட்டிலேயே தொடர்பு கொண்டனர் புலிகள். பணம் கேட்டனர்! உசாராக இருந்த வியாபாரி நபர் கனடாவில் மிகுந்த சிரமத்தில் வாழ்வதாக விளக்கங்கள் பல கொடுத்து புலிகளை நம்பவைத்து திருப்பி அனுப்பிவிட்டார். விடுமுறை முடிந்து கனடா திரும்புவதற்காக கொழும்பு நோக்கிப் புறப்பட்டார் வல்வெட்டித்துறை நபர். கிளிநொச்சியில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்பட்டனர், வல்வெட்டித்துறை நபரும் அவரது மனைவியும். ஓர் சிறிய விசாரணை உண்டு வாருங்கள் என்று இறக்கி அழைத்துச் சென்றனர் புலிகள்.
எப்படியாவது குறைந்தது பத்துலட்சத்தையாவது கநற்துவிடலாம் என்று புலிகளின் நிதி பறிப்பாளர் முற்பட்டார். வல்வெட்டித்துறை நபரோ தனது வாய்த் திறமையால் புலிகளிடமிருந்து நிதி பெறும் அளவுக்கு கதைகள் சொல்லி அவர்களை மனமிரங்க வைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் முழுவதும் கழிந்து விட்டது. மறுநாள் பிற்பகல்வரை தொடர்ந்து பணப்பறிப்பு உரையாடல். இறுதியாகச் சில புலிவிலங்குகள் வந்தனர். இவரையும் இவரது மனைவியையும் அருகில் வெட்டிவைக்கப்பட்டிருந்த குழி ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றனர். அக்குழி 10ஓ08 அகல நீளம் கொண்டதும் 10 அடி ஆழம் கொண்டதுமாக இருந்தது. ஏணி ஒன்றை இறக்கி வல்வெட்டித்துறை நபரை உள்ளே இறங்கும்படி உத்தரவிட்டனர். மனைவியை வெளியே நிற்கும்படி கூறினர்.
சிறிது நேரத்தில் ஐந்து ஆறு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து வல்வெட்டித்துறை நபர் இருந்த குழியினுள் போட்டனர். இதைப்பார்த்த அவரது மனைவி மயக்கமடைந்து கீழே விழுந்தார். வல்வெட்டித்துறை நபர் எழுப்பிய அலறல் சத்தத்தில் பாம்பு மிரண்டு குழியிலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தது. வல்வெட்டித்துறை நபர் கத்தினார், நீஙகள் கேட்கும் காசைத் தருகிறேன் என்னைக் காப்பாற்றுங்கள், என் மனைவியைக் காப்பாற்றுங்கள் என்று. ஏணியை வைத்தனர் உள்ளே. மனைவி மயக்கம் தெளிந்து, தனது செல்போனில் கனடாவுக்கு தனது குழந்தைகளிடத்துத் தொடர்பு கொண்டார்.
புலிகள் இதனைப் பயன்படுத்தி 50 லட்சம் ருபா வேண்டும் என்றனர். அவர்களும் சம்மதித்து தங்கள் பிள்ளைகளிடம் கேட்டனர். நாங்கள் ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம், எப்படியாவது நாங்கள் சொல்லும் நபரிடம் 50,000 டொலரைக் கொடுங்கள் என்று கேட்டனர். குழந்தைகளோ முடியாது. எங்களிடம் காசு இல்லை என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டனர்.
வல்வெட்டித்துறை நபரும் மனைவியும் தங்கள் குழந்தைகளிடம் மன்றாடத் தொடங்கிவிட்டனர். நாங்கள் சொல்வது உண்மை. எப்படியாவது காசைக் கொடுங்கள் என்று. குழந்தைகளோ தங்கள் தந்தை கூறிச் சென்றதை மறக்காமல், முடியாது என்று ஆணித்தரமாகச் இறுதியாக இந்த நபர் தனது கனடா நண்பருக்கு தொலைபேசியில் விபரத்தைக் கூறி காசை ஏற்பாடு செய்து கொடுக்கும் படியும், இவர் கனடாவுக்கு வந்து காசைத் தருவதாகவும் உறுதியளித்து புலிகள் கேட்ட காசு மொத்தமாகக் கொடுக்கப்பட்டது. இந்தத் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்தப் பாம்பு வித்தையைக்காட்டிப் பணம் பறித்தனர் புலிகள். வெளிநாடுகளிலிருந்து, இருந்தக் காலக்கட்டத்தில் யாழ்;பாணம் வந்த தமிழர்கள் முன்கூட்டியே புலிகளுக்குப் பணம் கொடுத்து அதற்கான பற்றுச் சீட்டுடன் தான் தங்கள் இனத்தவரைப் பார்க்க வடக்குக்கு வந்தனர். விடுதலைக்கான போராட்டங்களில் பலருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை!
(தொடரும்…)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’