வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 மார்ச், 2010


யாழ். மாநகரசபைப் பிரதேசத்திற்குள் வதியும் பின்தங்கியுள்ள பிரதேச மக்களான கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையப்பகுதி மக்களும் மீனாட்சிபுரம் பிரதேச மக்களும் தமது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவந்தனர்.



தமது வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் தமது ஜீவனோபாய தொழிற்துறைகளை ஏற்படுத்தித் தரும்படி கொட்டடி முத்தமிழ் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்த அதேநேரம் இயலுமான சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு உதவி செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு மேலாக தாம் வசித்துவரும் தமது காணிகளுக்கு உறுதிகளை பெற்றுத்தரும்படி மீனாட்சிபுரம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். காலாதிகாலமாக தாம் வசித்துவரும் இடத்தினை பல்வேறு முயற்சிகளின் நிமித்தம் கையகப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்த அம்மக்கள் அதனை தடுத்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

இச்சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ மாநகரசபை உறுப்பினர் கோமகன் ஆகியோரும் உடனிருந்ததுடன் தகுதிவாய்ந்த சட்டத்தரணியும் உடனிருந்து வருகை தந்திருந்த மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’