வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

யார் சேறு பூசினாலும் எமது மக்கள் எம்மை அறிவார்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


எமது மக்களின் நலன்சார்ந்து விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதால்தான் நாம் எமது மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளோம் என்றும் எமது மக்கள் எங்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பதால் எந்த சக்தி வந்து எம்மீது சேறுபூசினாலும் அதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதை நாம் உணர்வோம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 
நேற்று மாலை கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாராயணா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அவர்கள், எமது மக்களுடன் இருந்து எமது மக்களுக்கான பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருகி வரும் எமக்கான மக்கள் செல்வாக்கை திசை திருப்பலாம் என நினைத்து சில கையாலாகாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன என்பதை உணர்த்தியதுடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பத்திரிகை விற்பனை கருதியும் தங்களது சுயலாப அரசியல் கருதியும் வெளியிம் சிலர் தங்களது கடந்தகால மக்கள் விரோத செயல்களை மறந்துவிட்டு தங்களை நல்லவர்களாகக் காட்ட போலிவேடம் கொண்டு எமது மக்கள் மத்தியில் உலா வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
எமது மக்கள் இவ்வாறான தீயசக்திகளை இனங்கண்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இப்பொதுக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பிரபல வர்த்தகர்களான வின்னன் சந்திரமோகன் எழுத்தாளர் கோவை நந்தன் ஈ.பி.டி.பி. யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் நல்லூர் அமைப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.




















































































































































































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’