வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தவர்மீது மின்னல் தாக்கு _

கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த ஒருவரை மின்னல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மாத்தளை மாவட்டத்தில் உக்குவலை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடன் அங்கு தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நால்வரும் காயமடைந்தனர். 
அக்கறைத்தோட்டம் (அக்கற வத்த) என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த தொழிலாளி ஒருவரை மின்னல் தாக்கி, படுகயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேநேரம், அவருக்கு அருகில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நால்வர், அதிர்ச்சிக்குள்ளானதில் அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தவரின் மார்புப் பகுதி எரிகாயங்களுக்குள்ளாகி இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’