வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு இனி இராணுவ பாதுகாப்பு இல்லை: பாதுகாப்பு செயலாளர்


இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே .ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என கோத்தபாய தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பான கேள்வியொன்றுக்கு பதில் அளித்த கோத்தபாய, பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்படவில்லையென்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய முடிவின்படி அவரது இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இராணுவப் பிரிவுகளுக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’