
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட பிள்ளையான் தீர்மானித்துள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு உத்தேசித்திருந்த போதிலும், உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை படகு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடாததினால், ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்து பிள்ளையான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தேர்தலில் தனித்து போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’