வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

முன்னாள் இராணுவ அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும், இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக தொரதெனிய, குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பிலேயே அவர் விசாரணை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தொரதெனிய, பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொரதெனிய, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்கத்தின் தேர்தல் துஸ்பிரயோகங்களுக்கு இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்க தரப்பில் சுமத்தப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’