வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

கலைஞர் ஸ்ரீதருக்கு கலையுலகம் திரண்டுவந்து அஞ்சலி


'பல்கலைத் தென்றல்' கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடலுக்கு சகல துறைகளையும் சேர்ந்த கலையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

நாடகம், கவிதை, ஓவியம், பாடல், இசையமைப்பு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய ஸ்ரீதர் பிச்சையப்பா கடந்த சனிக்கிழமை காலமானார்.

ஸ்ரீதரின் இல்லத்திலிருந்து இன்றுகாலை எடுத்துவரப்பட்ட பூதவுடல் கலைஞர்களின் அஞ்சலிக்காக கொழும்பு 7 இல் அமைந்துள்ள கலாபவனத்தில் வைக்கப்பட்டது.

இலங்கையின் திரைத்துறையைச் சார்ந்தவர்கள், அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நாடகக் கலைஞர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என கலைத் துறையைச் சார்ந்த நூற்றுக்கணக்கானோர் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’