வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

ஐ.தே.முன்னணியில் பொன்சேகா இணைய மறுத்துள்ளமை கவலையளிக்கிறது: மனோ கணேசன்


சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பினை அவர் மறுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய தேசிய முன்னணியில் ஜெனரல் சரத் பொன்சேகாவை இணைத்துக்கொண்டு செயற்படுவதுதான் எமது நோக்கம். இதனாலேயே அவருக்கு நாம் அழைப்பினை விடுத்தோம்.

எனினும் அவர் எமது அழைப்பினை ஏற்க மறுத்துள்ளமை கவலையளிக்கிறது.

இருப்பினும் மீண்டும் ஒருமுறை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவுடன் இவ்விடயம் தொடர்பிப்ல் மீண்டும் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’