வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 பிப்ரவரி, 2010

பொன்சேகாவின் பணியாளர்கள் மேலும் 8பேர் இன்று விடுதலை


ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலக பணியாளர்கள் மேலும் 8 பேர் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டின் சாட்சியங்களும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி, இவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு ஊழியர்கள் 11 பேர் உட்பட 14 பேர் கடந்த வாரம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’