வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

51வயதான அதிபர் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் !!!


மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பதுளை மாவட்டம் பண்டாரவளைப் பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவியொருவரே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிபரால் இதற்கு முன்னர் 11ம் தரத்தைச் சேர்ந்த மாணவியொருவம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மயக்கமருந்தை ஊசிமூலம் இந்த இரண்டு சிறுமியர்களுக்கும் ஏற்றி குறித்த அதிபர் தமது வீட்டில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 51வயதான குறித்த அதிபர் பண்டாரவளை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’