வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடான பஸ் வண்டி பிரயாண நடைமுறையில் இன்று முதல் தளர்வு


யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடாக பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறை தளர்ததப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சசாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து இலச்சினையைப் பெற்றுக்கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இபோசவின் யாழ் பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, இன்று 8 பஸ் வண்டிகளில் பயணிகள் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணமாகியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்குப் பயணம் செய்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்பது குறித்த அறிவித்தல் தங்களுக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் இபோசவின் யாழ் பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை தெரிவித்தார்.

இதேபோன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான நடைமுறை என்ன என்பது பற்றியும் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’