-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 1 மே, 2013
வடக்கில் முஸ்லிம், சிங்கள மீள்குடியேற்றம்; த.தே.கூ இனரீதியாக சிந்திக்கிறது: விமல்
வ'டக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்;, சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாக சிந்திக்கின்றனர்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.குருதி தோய்ந்த இவ்வரலாற்று நாளில், பரிதி துடைத்தெழுவோம் வாரீர்
அழிவுகளுக்குப் பிந்திய எமது மண்ணில் அமைதி நிலை வலுப்பெற்று வரும் நிலையில், உழைக்கும் மக்களின் உன்னத தினத்தில், அம்மக்களின் ஒளிமயமான எதிர்கால நலன்காக்க தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.செவ்வாய், 30 ஏப்ரல், 2013
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை
கொழும்பில் கடத்தப்பட்ட வர்ததகர் ஹாலி- எலை பாழடைந்த வீட்டிலிருந்து மீட்பு
ஒ ன்றரை கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பில் கடத்தப்பட்டு கொழும்பு வர்த்தகர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹாலி எலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திங்கள், 29 ஏப்ரல், 2013
4 கட்சிகள் இணைந்து 'த.தே.கூ'வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம்
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சனி, 27 ஏப்ரல், 2013
இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல
இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல. எவ்விதமான முன் அறிவித்தலோ அனுமதியோ பெற்றுக் கொள்ளாமையினாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் நுழைவாயிலில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
அரசியலில் சூழ்நிலைக் கைதியாக உள்ளேன்: ஹக்கீம்
Fஅரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசாங்கம் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தாது தனது தவறை உணர்ந்து தீர்வை வழங்க வேண்டும் : சம்பந்தன் எம்.பி.
இ லங்கையின் தேசிய பிரச்சினை சர்வதேச ரீதியில் சென்றமைக்கு உள்நாட்டில் பிரச்சினை தீர்க்கப்படாமையே காரணமாகும். அத்துடன் அரசு- கூட்டமைப்பு பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















