வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் விமல் வீரவன்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் விமல் வீரவன்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2013

வடக்கில் முஸ்லிம், சிங்கள மீள்குடியேற்றம்; த.தே.கூ இனரீதியாக சிந்திக்கிறது: விமல்



'டக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்;, சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாக சிந்திக்கின்றனர்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா சதி : வீரவன்ச


திர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலமாகும். அதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை தற்போது அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சனி, 10 நவம்பர், 2012

13ஆம் திருத்தச்சட்ட விவகாரம் தொடர்பில் ரணிலுடன் விமல் பேச்சு


13ஆம் திருத்தச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் விமல் வீரவன்ச பேச்சுவார்த்தை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே இன்று இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

பாலியல் குற்றம் புரிவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்: விமல் வீரவன்ச



ந்த நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்துச் கொண்டே செல்கின்றன. இக்குற்றச் செயல்களில் சிறுவர்களை பாலியலுக்கு ஈடுபடுவோருக்கு ஆகக்கூடிய தண்டனையாக மரண தண்டனையாவது விதிக்க வேண்டும்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

புதன், 7 மார்ச், 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவு எடுக்கநேரிடும் அரசுக்கு ஜா. ஹெல உறுமய, தேசிய சு. முன்னணி


ல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.

புதன், 8 ஜூன், 2011

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி: விமல் வீரவன்ச

நா ட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டதே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை: விமல்

வி டுதலைப்புலி ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் கோடிக் கணக்கான பணத்தை இலஞ்சமாக வழங்கியே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ரஷ்யா, சீனா ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக முன்வர வேண்டும்: விமல் வீரவன்ச

லங்கைக்கு எதிரான ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் முன்வர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கவும்: அமைச்சர் விமல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளுராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் வீடமைப்பு, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், 22 நவம்பர், 2010

புதிய வரிக் கட்டமைப்பு, சம்பள உயர்வு பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்கள்

லங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விடயமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க த்தினால் முன்வைக்கப்படும். புதி ய வரிக்கட்டமைப்பு, அரச ஊழிய ர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு நிவாரணங்கள், அபிவிருத்திக்கான தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

திங்கள், 15 நவம்பர், 2010

ஆசியாவிலேயே வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நடாக இலங்கை உள்ளது : விமல்

சியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கை இருப்பதாக வீடமைப்பு மற்றும் பொது சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆரின் அரசியலமைப்பே போதுமானது :விமல் வீரவன்ச

ர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பே போதுமானது.
புதிய திருத்தங்கள் எதுவும் தேவையற்றது. வெளிப்படை தன்மை குறித்து பேசும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் போன்றவற்றின் வெளிப்படைத் தன்மை குறித்தும் பதில் கூற வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்

வெள்ளி, 9 ஜூலை, 2010

ரஷ்ய தூதரகம் நோக்கி ஊர்வலம் : நன்றி கடிதம் கையளிப்பு

இலங்கைக்கு ரஷ்யா வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்சவினால் கடிதம் ஒன்று ரஷ்ய தூதுவரிடம் சற்று முன்னர்