வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வீ.ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீ.ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்: ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்



லங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும். அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 22 மே, 2012

தனி மாவட்டக் கோரிக்கையை முன்வைத்தே கிளிநொச்சியை தனி மாவட்டமாகப் பிரித்தேன்:வீ.ஆனந்தசங்கரி



கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்ட நான் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்த வேளை தனிமாவட்டக் கோரிக்கையை முன்வைத்து யாழ்.மாவட்டத்துடன் இருந்த கிளிநொச்சியை தனி மாவட்டமாக பிரித்தேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி தொகுதி எம்.பி.யுமான வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

சனி, 10 செப்டம்பர், 2011

கிறீஸ் மனிதன் விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டியவையே: ஆனந்தசங்கரி

ர்ம மனிதன் விவகாரம் தொடர்பாக ஐனாதிபதி உடனடியாக ஆணைக்குழுவை நியமித்து விசாரணை மேற்கொண்டால்தான் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமலும், சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்களின் நோக்கத்தையும் இனம் காணுவதற்கும் முடியுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

த.வி.கூ. வருடாந்த மாநாடு செப்டெம்பரில்: த.தே.கூ. கட்சிகளுக்கும் அழைப்பு

மிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம் இவையெல்லாம் உளுத்துப்போன சுலோகங்கள். எந்தத் தமிழனும் இதற்கு மாறானவன் அல்ல. இருப்பினும் கூட்டமைப்பினர் இந்தச் சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுகின்றனர்

வீ.ஆனந்தசங்கரி உதயனுக்கு வழங்கிய செவ்வி
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவரும் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரி உதயனுக்கு வழங்கிய செவ்வி இது.
Veerasingham-Anandasangareeகேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம்?
பதில்: நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது. ஆனால் இன்று அப்பிடியல்ல சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; கொலைகளுடன் தொடர்புடையவர்கள், தூள் ("குடு")  வியாபாரிகள் போன்ற சமூக விரோதிகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கிறார்கள். நான் பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

புதன், 24 மார்ச், 2010

இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவை போன்ற மாநிலங்களின் அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வே சரியானது – ரிபிசியில ஆனந்தசங்கரி!

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவை போன்ற மாநிலங்களின் அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வே சரியானதுகாக அமையும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும் யாழ் மாவட்டத்தின் அக்கட்சியின் தலைமை வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி ரிபிசியில நடைபெற்ற அரசியில் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.